Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (26.03.2025) மின் பாதையில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் பாதை பணிகள்
தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.
Mahua Moitra: கொலிஜியத்திற்கு பாடை? உளவு பார்ப்பது அரசு வேலையா? பாஜகவை திணறடித்த மஹுவா மொய்த்ரா
மின்நிறுத்த நேரம்
பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியில் இருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
Siragadikka Aasai: லீக் ஆனது 'சிறகடிக்க ஆசை' சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ! இன்டர்நெட்டில் பரபரப்பு!
ஆச்சாள்புரம் துணை மின்நிலையம்
அந்த வகையில் சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட ஆச்சாள்புரம் துணைமின் நிலையத்தில் நாளை அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஆச்சாள்புரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை தினம் 26-03-2025 புதன்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 03.00 வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் சீர்காழி வடக்கு மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
ஆச்சாள்புரம், மாங்கனாம்பட்டு, கொள்ளிடம், ஆணைகாரன்சத்திரம், மகேந்திரப்பள்ளி, பழையார், புதுப்பட்டிணம், மாதானம், பழையபாளையம், பச்சைபெருமாநல்லூர், சீயாளம், தாண்டனவன்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்
மாறுதலுக்கு உட்பட்டது
மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.