மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டத்திற்கு உட்பட்ட செம்பனார்கோயில் மற்றும் பொறையார் பகுதிகளில் நாளைய தினம் 20.12.2025 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

மின்தடை ஏற்படும் இடங்கள்

பொறையார் மற்றும் செம்பனார்கோயில் ஆகிய இரண்டு முக்கிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

Continues below advertisement

பொறையார் துணை மின் நிலையம்

  • காட்டுசேரி
  • ஆயப்பாடி
  • சாத்தனூர்
  • சங்கரன்பந்தல்
  • தில்லையாடி
  • திருவிடைகழி
  • T. மணல்மேடு
  • கண்ணங்குடி
  • மாத்தூர்
  • திருக்கடையூர்
  • அனந்தமங்களம்
  • ஆணைகோயில்
  • திருமெய்ஞானம்
  • மற்றும்
  • P.P.நல்லூர்

செம்பனார்கோயில் துணை மின் நிலையம்

  • கிடாரங்கொண்டான்
  • செம்பனார்கோயில்
  • மேலபாதி
  • கருவாழகரை
  • கஞ்சாநகரம்
  • கீழையூர்
  • கருவி
  • ஆக்கூர்
  • செம்பதனிருப்பு
  • தலைச்சங்காடு
  • மடப்புரம்
  • காலகஸ்திநாதபுரம்
  • மற்றும்
  • முடிகண்டநல்லூர்.

நேரம் மற்றும் காரணம்

நாளை 20.12.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இந்த மின் நிறுத்தம் அமலில் இருக்கும். இந்த நேரத்தில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது 

மின்வாரிய கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர தொழில்நுட்ப காரணங்களைப் பொறுத்து, இந்த மின் நிறுத்த நேரமானது கடைசி நேரத்தில் மாற்றங்களுக்கு உட்பட்டது என மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த அறிவிப்பினை கருத்தில் கொண்டு தங்கள் அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சரவணன் உதவி செயற்பொறியாளர் (இயக்குதலும் & பராமரித்தலும்), செம்பனார்கோயில் அவர்களால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஓர் அறிவுறுத்தல்

பொதுவாக, பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 5 மணிக்கு மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும். எனினும், மின் கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து இந்த மின் நிறுத்தம் கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

ஆகவே, மேற்கண்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு, இந்த தற்காலிக மின்தடையால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி 

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

பொதுவான மின்நிறுத்தம்  

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 3 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.