இவர்தான் மயிலாடுதுறையின் புதிய ஆட்சியர்..! பரபரப்பான சூழ்நிலையில் மூன்றாவது ஆட்சியராக ஸ்ரீகாந்த் பொறுப்பேற்பு..

மயிலாடுதுறைத்தின் மூன்றாவது புதிய ஆட்சியராக ஸ்ரீகாந்த் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த மகாபாரதி நேற்று மாலை மாற்றப்பட நிலையில் இன்று இரவு மயிலாடுதுறை மாவட்டத்தின் அடுத்த ஆட்சியராக ஸ்ரீகாந்த் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

Continues below advertisement

ஆட்சியர் மாற்றம் 

நேற்று காலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தொடர்பாக பேசிய காணொளி வைரலான நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெரும் கண்டனங்கள் எழுந்தன. அடுத்து தமிழக முதன்மைச் செயலாளர் முருகானந்தம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த மகாபாரதியை மாற்றம் செய்து உத்தரவிட்டார்.

புதிய ஆட்சியர் 

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் 2016-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக ஆனவர். உதவி ஆட்சியர் , கூடுதல் ஆட்சியராக பணியாற்றியவர் தற்போது ஈரோடு மாநகராட்சியின் ஆணையராக பணியாற்றி வந்த சூழலில் மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மாற்றப்பட்ட நிலையில் இன்று இரவு அவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola