வைகை அணை நிரம்பியுள்ள சூழலில் - உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாயில் நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை உசிலம்பட்டி கோட்டாச்சியரிடம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.

 


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த உயரம் 71 அடியாக இருந்த போதும், அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் போது முழு கொள்ளளவை எட்டியதாக கணக்கிடப்படுகிறது.  நேற்று மாலை 5 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 68.50 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை ஆறு, முல்லைப்பெரியாறு கொட்டக்குடி ஆறு-ஆகிய ஆறுகளில் இருந்து அதிகப்படியான நீர்வரத்தால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இதனால் தேனி,மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்படுவதாக நீர்வளத்துறையினர் அறிவித்தனர். இந்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் இன்று 69 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கால்வாயில் நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை உசிலம்பட்டி கோட்டாச்சியரிடம் உசிலம்பட்டி எம்.எல்.ஏ கோரிக்கை மனு அளித்தார்.










 

வைகை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியில் 69 அடியை எட்டி நிரம்பியுள்ள சூழலில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் கனவு திட்டமான உள்ள உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் ரவிச்சந்திரனிடம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் கோரிக்கை மனு அளித்தார்.



 

மேலும் திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு கடந்த செப்டம்பர் மாதமே வைகை அணையிலிருந்து நீர் திறந்து விட்டிருக்க வேண்டிய சூழலில் தற்போது வரை நீர் திறக்கப்படவில்லை என்றும், திருமங்கலம் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசு விரைவில் 58 கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

 


RAINFALL REPORT


District  : Madurai 
Date   : 09/11/2023


Total No.of Rainguage Stations -- 22.


District Rainfall in mm - 964.30
Average Rainfall in mm - 43.83


1) Airport Madurai --  32.40
2) Viraganur  -- 20.00
3) Madurai North - 27.50
4) Chittampatti -- 45.80
5) Idayapatti   -- 70.00
6) Kallandiri  -- 42.00
7) Tallakulam -- 41.00
8) Melur   -- 79.50
9) Pulipatti -- 52.20
10) Thaniyamangalam -- 52.00
11)Sathiyar dam -- 55.00
12)Mettupatti   --- 36.40
13)Andipatti -- 35.60
14)Sholavandhan  -- 25.50
15)Vadipatti  -- 43.00
16)Usilampatti  -- 37.00
17)Kuppanampatti  -- 22.00
18)Kalligudi  -- 60.20
19)Tirumangalam  -- 55.20
20)Peraiyur   -- 37.00
21)Elumalai  -- 60.80
22)Periyapatti  -- 34.20 



RESERVOIR POSITION


TOTAL FEET    152.00 ft
PERIYAR DAM 128.40 ft
STORAGE          4352 Mcft
INFLOW            2230 C/s
DISCHARGE       105 C/s


TOTAL FEET      71.00 ft
VAIGAI DAM      69.85 ft
STORAGE           5787 Mcft 
INFLOW             2705 C/s  
DISCHARGE          69 C/s


TOTAL FEET          29.00 ft
SATHIYAR DAM    22.80 ft
STORAGE            35.19 Mcft 
INFLOW               27.00  C/s  
DISCHARGE           0.00 C/s