மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிரதையாக ஓட்டியதாக டி.டி.எஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டி.டி.எஃப் வாசனை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

டி.டி.எஃப்., வாசன் மீண்டும் மதுரையில் கைது


யூடியூப்பில் 40 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட பிரபலமான டி.டி.எஃப்., வாசன், மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அதிவேகமாக வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய  வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். சென்னையில் இருந்து கோவை செல்லும்போது பாலுசெட்டி சத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த டிடிஎஃப் வாசன், விபத்தில் சிக்கினார். அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தியதாக டிடிஎஃப் வாசனை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக டி.டி.எஃப் வாசன் மீது 6 பிரிவுகளின். கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டி.டி.எஃப் வாசனை கைது செய்து தீவிர விசாரணை.


6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு


பைக் ரேஸரான. டி.டி.எஃப் வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் டி.டி.எஃப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றிவருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்து வருகிறார்.


இந்நிலையில்  கடந்த 15 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை  அஜாக்கிரதையாகவும் கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும் அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ID ல் யூடியூப் சேனலில் பதவிட்டுள்ளதாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் அளித்த புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் பைக்ரேஸரான டி.டி.எஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்திவருகின்றனர்.







மீண்டும் மீண்டுமா

 

ஏற்கனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும்போது காரில் போன் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக டி.டி.எஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் வாசனை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.