Just In




Pongal leave : பொங்கல் விடுமுறை முடிந்தும் குறையாத சுற்றுலா பயணிகள் கூட்டம்.. விழிபிதுங்கும் கொடைக்கானல்.. முழு விவரம்
Kodaikanal : வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
பண்டிகை தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால், நகர் பகுதிகளில் சுமார் 5 கிமீ தூரம் வரை சாலையின் இரு புறங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா வாகனங்கள் சென்றன.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
பொங்கல் தொடர் விடுமுறை கொண்டாட கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். வழக்கமாக வார விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கொடைக்கானலுக்கு வருவார்கள். தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாட தொடர்பு விடுமுறை விடப்பட்டுள்ளது, இதனால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு காரணமாக ஒரு சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக இதமான சீதோசன நிலை காணப்படுகிறது. பகலில் மேகமூட்டமும், இரவில் கடும் குளிரும் நிலவி வருகிறது. இந்த இதமான சூழ்நிலை குளிர்ந்த சீதோஷ்ணத்தையும் ரசித்தபடி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க : Union Budget 2025-26: மாறப்போகும் நிதிநிலை..! குறையுமா வரி? உயருமா வருமானம்? - பிப்.1ம் தேதி மத்திய அரசு பட்ஜெட்
பழனி சாலையை பயன்படுத்தும் சுற்றுலா பயணிகள் பழனி அடிவாரப் பகுதியில் சோதனை செய்யப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்டு வரும் கூட்ட நெரிசல் குறைந்துள்ளது. எனவே இந்த நடைமுறை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பேருந்துகள் அனுமதிக்கப்படாத நிலையிலும் வாகன நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: TVK Vijay: அனுமதி கொடுத்த காவல்துறை... பரந்தூர் பறக்கும் விஜய்.. பின்னணி என்ன?
இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுற்றுலா இடங்களில் கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் போது உணவு விடுதிகள் மற்றும் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதும் கூடுதல் விளைவசூலிக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறதாக சுற்றுலா பயணிகளிடையே புகார் எழுந்துள்ளது. இதனால் சுற்றுலா வரும் பலர் அவ்வப்போது பாதிக்கப்பட்டு செல்கின்றனர். எனவே இதனையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.