மதுரை மாநகர் k.புதூர் (டி.ஆர்.ஒ.,)  காலனி முனியாண்டி கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது. அதனை தொடர்ந்து விபசார தடுப்பு பிரிவு  விஜயலட்சுமி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை அதிரடியாக சோதனை மேற்கொண்டபோது பெண் உள்ளிட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.


 





அவர் அதே பகுதியை சேர்ந்த சுமதி என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே விபச்சார வழக்கு உள்ளது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் குடும்ப வறுமையில் உள்ள ஏழை பெண்களை ஆசை வார்த்தை கூறி அழைத்து வந்து அங்கு வாடகை வீட்டை பிடித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்(49) மற்றும் செல்லூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் காசி (42) என்பது தெரியவந்தது.

 





 

அதனைத் தொடர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இரண்டு பெண்களை மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர், மேலும் அவரிடம் நடத்தி விசாரணையில் சுமதி மற்றும் காவலர் தேவேந்திரன் இருவரும் கூட்டாக இணைந்து பாலியல் தொழில் நடத்தி வந்ததும் அதற்கு புரோக்கராக ஆட்டோ ஓட்டுனர் காசி செயல்பட்டதும் தெரிய வந்தது. மேலும்  மீட்கப்பட்ட இரண்டு பெண்களின் சுமதியின் மகள் ஒருவர் எனவும் சொல்லப்படுகிறது. இதில் காவலர் பாலியல் தொழில் வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது