முற்றுகை போராட்டம்:


கடந்த 30 நாட்களுக்கும் மேலாக முறையான குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டும், 100% வாக்குப்பதிவு பேரணிக்காக வந்த மாவட்ட ஆட்சியரின் வாகனம் நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை எடுத்து செல்ல விடாமல் சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.




குடிநீர் தட்டுப்பாடு:


தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட வடகரை பகுதியில் உள்ள 2,6,8,20 ஆகிய வார்டுகளில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை எனக் கூறி பெரியகுளம் நகராட்சி அலுவலக வாயில் முன்பாக காலி குடங்களுடன்  பெண்கள் மற்றும் ஆண்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் ஒரு மாத காலமாக குடிநீர் வரவில்லை எனக் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் உடனடியாக குடிநீர் வழங்கினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


எடப்பாடி பழனிசாமி அரசியல் அமாவாசை - முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்


மாவட்ட ஆட்சியர் வாகனம் சிறைபிடிப்பு:


இதனிடையே மாவட்ட ஆட்சியர் தலைமையில் 100% வாக்கு பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  மாவட்ட ஆட்சியர் ஷஜிவனா மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் தன்னார்வலர்கள் பேரணி நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நிறுத்தி விட்டு சென்ற நிலையில்  பேரணி முடிவற்று   நகராட்சி அலுவலகத்தில் இருந்த மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை எடுத்துச் செல்ல முற்பட்ட பொழுது  மாவட்ட ஆட்சியரின் வாகனத்தை சிறை பிடித்து சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்தியில் பேசிய ஜே.பி.நட்டா: கூட்டம் கூட்டமாக கலைந்து சென்ற மக்கள்! விரிச்சோடிய பொதுக்கூட்டம்


குடிநீர் வழங்க நடவடிக்கை:


இதனிடையே பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன் குடிநீர் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின் மாவட்ட ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் வாகனத்தில் அங்கிருந்து ஏறிச் சென்றார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.