தமிழக முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் இன்று தேனி மாவட்டத்தில் உள்ள ஊஞ்சாம்பட்டி பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் 114 கோடியே 21 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 40 பணிகளை திறந்து வைத்து, 74 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 102 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 10,427 பயனாளிகளுக்கு 71 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.


இவ்விழாவில் சட்டத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை ,நகராட்சி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை போன்ற பல்வேறு துறைகளில் முடிவு பெற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். சட்டக்கல்வியின் தரத்தினை மேம்படுத்துதல், அரசு சட்டக் கல்லூரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், மாணவ, மாணவியர்களுக்கு விடுதிக் கட்டடங்கள் கட்டுதல், பழுதடைந்த கல்லூரிக் கட்டடங்களை சீரமைத்தல், கூடுதல் வகுப்பறைகள் கட்டுதல், சட்டக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.




அந்த வகையில் சட்டத்துறை சார்பில் தேனியில் 89 கோடியே 1 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தேனி அரசு சட்டக் கல்லூரிக் கட்டடம் மற்றும் மாணவ மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மந்திகளை மூலக்கடை மற்றும் நாகலாபுரம். கொத்தப்பட்டி கோகிலாபுரம். கோடாங்கிபட்டி,  எ. புதுப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டடங்கள்  பொன்னன்படுகை நரசிங்காபுரம். டொம்புச்சேரி போ.அம்மாபட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக் கட்டடங்கள், நியாய விலைக்கடை கட்டடங்கள், ஜி.கல்லுப்பட்டி முதல் காமக்காபட்டி வரை, அம்மாபட்டி முதல் விசுவாசபுரம் வரை சாலை அமைக்கும் பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட 5 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் செலவிலான பணிகள் முடிவுற்றதை  தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.




பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் குன்னூர், மார்க்கையன் கோட்டை மற்றும் சிலமலை ஆகிய இடங்களில் 11 கோடியே 40 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்களும் , பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஜி.கல்லுப்பட்டி, பெரியகுளம் பூதிப்புரம் மேலசிந்தலைச்சேரி, எருமலைநாயக்கன்பட்டி அம்மாபுரம் மற்றும் தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 7 கோடியே 62 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் குடிநீர் வசதிகள் போன்றவைகளும் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டன.




அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை சார்பில் போடிநாயக்கனூர் நகராட்சியில் 1 கோடியே 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி தளம், உடற்பயிற்சிக்கூடம் என மொத்தம் 114 கோடியே 21 இலட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற 40 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண