தேனி மாவட்டம், தமிழக கேரள எல்லையை இணைக்கும் கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன.


யார் தலைவர்? நானா நீயா? திட்டிய கருணாநிதி! நினைவுபடுத்திய துரைமுருகன் - தேம்பி தேம்பி அழுத டி.ஆர் பாலு!



ஒரு ஜெனரேட்டர் மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். கடந்த வெள்ளிக்கிழமை வரை வினாடிக்கு 511 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதன் காரணமாக லோயர்கேம்ப் மின்நிலையத்தில் 2 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு தலா 23 மெகாவாட் வீதம் மொத்தம் 46 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது வைகை அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நேற்று முன்தினம் காலை முதல் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு வினாடிக்கு 511 கனஅடியில் இருந்து 1,867 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.


Crime: மூதாட்டிகளே உஷார்... தேடி தேடி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் ராட்சசன்...!



மேட்டூர் அணையின் நீர் வரத்து 3,260 கன அடியில் இருந்து 3,017 கன அடியாக குறைவு!


இதன் காரணமாக நேற்று முன்தினம் காலை முதல் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில், 4 ஜெனரேட்டர் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் மொத்தம் 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 139.40 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 89 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,867 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண