watch video | மதுரை மேலூர் அருகே கோலாகலமாக நடந்த மீன்பிடித் திருவிழா - கூட்டம் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்

நிறைய மீன்கள் கிடைத்தால் விவசாயம் நல்லபடியாக நடைபெறும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது

Continues below advertisement

மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியிலுள்ள கம்புளியான் கண்மாயி அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும்  மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவில்  சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்று அதிகாலையில் கண்மாயில் வந்து குவிந்தனர்.

Continues below advertisement


அதனை அடுத்து கிராமத்தின் சார்பில் துண்டு  வீசப்பட்டு பிறகு அனைவரும் கண்மாயில்  ஒன்றாக இறங்கி தங்கள் கையில் வைத்துள்ள மீன் கூடைகள், வலைகள், கச்சா, உள்ளிட்டவைகளை கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்து அசத்தினார் மேலும் பிடிபட்ட  மீன்களான கெலுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி, உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து அசத்தினார். மேலும் பிடிபட்ட மீன்களை முதலில் இறைவனுக்கு படைத்து பின்பு தாங்கள் அருந்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
 


 
மேலூர் பொசான் கூறுகையில், கடந்த வாரம் சூரப்பட்டியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. அங்கு ஏராளமான மீன்கள் கிடைத்தது. அதே போல் இன்றும் சருகுவலையபட்டியில் மீன்கள் கிடைத்துள்ளது. நிறைய மீன்கள் கிடைத்தால் விவசாயம் நல்லபடியாக நடைபெறும்” என்றார். இந்தாண்டு பல்வேறு கிராமங்களில் கண்மாய் நிறைந்துள்ளதால் அதிகளவு மீன்பிடி திருவிழா நடைபெறும் என மீன்பிடி ஆர்வலர்கள் தெரிவித்தனர். 
 
Continues below advertisement
Sponsored Links by Taboola