Just In

போருக்கு நடுவே இந்திய பிரதமருடன் பேசிய நெதன்யாகு; மோடி வலியுறுத்தியது என்ன தெரியுமா.?

கண்டவுடன் சுடுங்க.. கோயில் முன் பசுவின் தலை? போலீசுக்கு பறந்த ஆர்டர்

மாறி மாறி தாக்கிக்கொண்ட இஸ்ரேல்-ஈரான்; ட்ரம்ப் கொடுத்த வார்னிங் - மத்திய கிழக்கில் பதற்றம்

"விசாரணையின் முடிவில் உண்மை வெளிவரும்" விமான விபத்து குறித்து டாடா குழு தலைவர் சந்திரசேகரன் பளீச்

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: 630 காலிப்பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது?
படை தலைவன் ரிலீஸ் கொண்டாட்டம்; விஜயகாந்த் சிலை முன்பு மொட்டை அடித்த ரசிகர்கள்
watch video | மதுரை மேலூர் அருகே கோலாகலமாக நடந்த மீன்பிடித் திருவிழா - கூட்டம் கூட்டமாக மீன்பிடித்த கிராம மக்கள்
நிறைய மீன்கள் கிடைத்தால் விவசாயம் நல்லபடியாக நடைபெறும் என்பது கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது
Continues below advertisement

மீன்பிடி_திருவிழா
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையபட்டியிலுள்ள கம்புளியான் கண்மாயி அமைந்துள்ளது. இந்த கண்மாயில் வருடந்தோறும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மீன்பிடி திருவிழாவில் சருகுவலையபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான வடக்குவலையபட்டி, தனியமங்கலம், கீழவளவு, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இன்று அதிகாலையில் கண்மாயில் வந்து குவிந்தனர்.
Continues below advertisement

அதனை அடுத்து கிராமத்தின் சார்பில் துண்டு வீசப்பட்டு பிறகு அனைவரும் கண்மாயில் ஒன்றாக இறங்கி தங்கள் கையில் வைத்துள்ள மீன் கூடைகள், வலைகள், கச்சா, உள்ளிட்டவைகளை கொண்டு பல்வேறு வகையான மீன்களை பிடித்து அசத்தினார் மேலும் பிடிபட்ட மீன்களான கெலுத்தி, கெண்டை, கட்லா, ஜிலேபி, உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டுவகை மீன்களை பிடித்து அசத்தினார். மேலும் பிடிபட்ட மீன்களை முதலில் இறைவனுக்கு படைத்து பின்பு தாங்கள் அருந்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலூர் பொசான் கூறுகையில், கடந்த வாரம் சூரப்பட்டியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. அங்கு ஏராளமான மீன்கள் கிடைத்தது. அதே போல் இன்றும் சருகுவலையபட்டியில் மீன்கள் கிடைத்துள்ளது. நிறைய மீன்கள் கிடைத்தால் விவசாயம் நல்லபடியாக நடைபெறும்” என்றார். இந்தாண்டு பல்வேறு கிராமங்களில் கண்மாய் நிறைந்துள்ளதால் அதிகளவு மீன்பிடி திருவிழா நடைபெறும் என மீன்பிடி ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை - தெற்கு ரயில்வே அறிவிப்பு
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.