தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பாடப் புத்தகங்களும் அனுப்பப்பட்டு வருகிறது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமில்லை திண்டுக்கல்லில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி  திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.


CM Stalin Wish CSK: 'தோனியின் தலைமையின் கீழ் 5வது கோப்பை..' சி.எஸ்.கே.விற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!




திண்டுக்கல் - பழனி சாலையில் உள்ள தமிழக பாடநூல் கிடங்கில் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் பாடநூல் கழக தலைவர் லியோனி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது அங்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான அனைத்து பாட புத்தகங்கள் போதிய அளவு கையிருப்பு உள்ளதா என அதிகாரியிடம் விவரம் கேட்டறிந்தனர்.


Crime: இரவில் தூங்கச்சென்ற இளம்பெண் காலை உடல்கருகிய நிலையில் சடலமாக மீட்பு..! குழப்பத்தில் போலீஸ்..!


இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தமிழகத்தில் உள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் ஏப்ரல் மாதமே தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஏப்ரல் மாதமே அனைத்து புத்தகங்களும் தயாராகி விட்டன. தற்பொழுது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 296 பள்ளிகள் உள்ளது. இதில் 200 பள்ளிகளுக்கு மேல் தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனர். அரிசி கொம்பன் யானையை பிடிக்க மாவட்ட நிர்வாகம் வனத்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை விரைந்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு போய்விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவு போட்டிருந்தாலும் மற்ற பகுதியில் இருந்து யானை பார்ப்பதற்காக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் மக்கள் தொடர்ந்து படை எடுத்து வருகின்றனர். மேகமலையிலிருந்து வந்த அரிசி கொம்பன் யானை தற்பொழுது மீண்டும் மேகமலைப் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது. இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும்” என தெரிவித்தார். 




இதனைத் தொடர்ந்து தமிழக பாடநூல் கழக தலைவர் லியோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை புத்தகங்கள்  3 கோடியே 56 லட்சம்  தயாராக உள்ளது. அரசு பள்ளிகளுக்கு தேவையான இலவச பாட புத்தகங்கள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தயாராக உள்ளது. மேலும் அரசு பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் புத்தகப்பை, பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், ஷூ என 11 பொருட்கள் 80 சதவிகிதம் தற்பொழுது தயாராக உள்ளது. வருகின்ற ஜூன் மாதம் அனைத்து இலவச பொருட்களும் தயாராகிவிடும். முதலமைச்சர் மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கி துவக்கி வைக்க உள்ளார். அரசு பள்ளிகளில் 75% பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி உள்ளது. ஆங்கில வழி கல்விக்கு ஆசைப்பட்டு ஏராளமான பொதுமக்கள் தனியார் பள்ளிகளுக்கு செல்கின்றனர். அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் மாணவனை சேர்த்தால் 7.5  சதவீத இட ஒதுக்கீடு இருப்பதால் கல்லூரி வரை  இலவசமாக கல்வி கற்கலாம். ஆகவே அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும். ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் டாக்டர் கலைஞர் பற்றி திராவிட மொழிக் குடும்பம் என்ற பாடத்தில் அவரைப் பற்றி ஒரு பகுதி சேர்க்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.




மேலும் செய்திகளை காண,ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண