தமிழ்நாடு முழுவதும் ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. மதுரையில் மதுரை மாநகர் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமை நடைபெற்றது. இதில் 1000-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். இதில் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராய பலி, கொலை கொள்ளை, வழிப்பறி நடக்குது என்றும் இதற்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க பதவி விலக வேண்டும் கண்டன முழக்கம் எழுப்பினர். பின்னர் பேசிய செல்லூர் ராஜூ, “திமுக ஆட்சிக்கு வந்தாலே கள்ளச்சாராய உயிரிழப்புகள் வந்து விடுகின்றன. முன்னாள் முதலவர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 4840 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்து உள்ளன. தற்பொழுது 40 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைத்து இருக்கிறது. வேறு எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் முதல்வரின் மருமகனும் மகனும் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் உண்மையை பேசியதால் அவருக்கு பதவி பறிக்கப்பட்டு தற்பொழுது பல் பிடுங்கப்பட்டு அமைச்சரவையில் கடைசி அமைச்சரிடம் இருந்த மனோத தங்கராஜின் பதவி தற்பொழுது அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.




ஆனாலும் தான் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவன் பதவி முக்கியமில்லை கொள்கையின் அடிப்படையிலேயே செயல்படுவேன் என்று பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருக்கிறார். அவரது பெயரை கட்சி நிகழ்ச்சிகளில் போட வேண்டாம் என கட்சியினருக்கு திமுக தெரிவித்து  இருக்கிறது. தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ரோம் நகரம் தீப்பிடித்து எறிந்த பொழுது மன்னர் பிடல் வாசித்தது போல நமது முதல்வர் ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று போட்டோ சூட் நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆனால் திமுகவினர் பாரத பிரதமர் மோடியை கிண்டல் கேலி செய்தனர். ஆனால் ஆஸ்திரேலிய பிரதமர் நமது பிரதமர் மோடியைப் தி பாஸ் என்கிறார், பப்புவா நாட்டின் பிரதமர் பிரதமரின் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்.  புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் தமிழக ஆதீனங்க வழங்கிய செங்கோல் வைக்கப்பட்டு உள்ளது அதனை எடப்பாடி பழனிசாமி வரவேற்று இருக்கிறார். எல்லாரும் அவருக்கு ஒரு ஓ போடுங்க..... தமிழ்நாட்டில் அதிமுக மயில் போன்றது. அது ஆடினால் அழகாக இருக்கும், திமுக வான்கோழி என்று கூறினார்.  திமுக ஆட்சி என்றாலே வில்லங்கமும் பிரச்னையுமாக உள்ளது. அவர்கள் போராட்டம் நடத்த மட்டுமே லாயக்கு அதிமுக தான் ஆட்சி நடத்த ஏற்ற கட்சி, கூட்டணிக் கட்சிகள் அனைவரும் தற்போது திமுக ஆட்சியில் நடக்கின்ற சட்டவிரோத செயல்களை கண்டிக்காமல் இருக்கின்றன.




திருமாவளவன் மட்டுமே சாராய உயிர் இழப்புகளுக்கு எதிராக குரல் கொடுத்து இருக்கிறார். மற்ற ஆளும் கூட்டணி கட்சிகள் வாயில் திண்டுக்கல் பூட்டை போட்டு இருக்கிறார்கள். திமுகவினருக்கு மானம் ரோஷம் இருக்கிறதா என்ன கேள்வி கேட்டாலும் அவர்கள் வாயை திறப்பது இல்லை. இனி போராட்ட களம் தான் நமக்கு போராடி 2024 ஆம் ஆண்டு வெற்றி பெற வேண்டும். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களையெல்லாம் திமுக கொண்டு வந்தது போல திறப்பு விழா நடத்துகின்றன.  தெப்பக்குளத்தில் வைகையில் நீர் செல்லும் போது நிரப்பாமல் தற்போது கழிவு நீர் கலக்கும் சூழல் உள்ளது. கண்டன ஆர்ப்பாட்டம் வெயிலில் நடைபெறுவதால் தொண்டர்களின் தாகம் தீர்ப்பதற்காக நாங்கள் கள்ளச்சாராயம் கொடுப்பதில்லை மோரும், சர்பத்து மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறோம் என கட்சியினர் அதனை அருந்தி வெயிலில் இருந்து இளைப்பாற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி நிறைவு செய்தார்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண