சட்டம் & ஒழுங்கை பாதிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.

 

மதுரை மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டத்தை தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் நடத்தினார்.

 





 

இக்கூட்டத்தில் பழிக்கு பழி கொலை சம்பவங்களை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், புலன் விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் போன்றவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்க கூடிய நடவடிக்கையில் ஈடுபடும் ரவுடிகள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர