எம்ஜிஆரின் நூறு ரூபாய் நாணயத்தின் போது பிரதமர் மோடியை கூப்பிட்டு இருந்தால் மத சாயம் பூசப்பட்டிருக்கும்; எம்.ஜி.ஆர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவர்; முன்னாள் அமைச்சர்  கே.செல்லூர் ராஜூ பேட்டி.

மதுரையில் செல்லூர் ராஜூ பேட்டி


மதுரை மண்டலத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் அண்ணா தொழிற்சங்கத்தின் புதிய உறுப்பினர் உரிமை அட்டை வழங்கும் விழா முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் முன்னிலையில் பங்கேற்று கழக உரிமை அட்டையை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: அரசியலில் அண்ணாமலை கத்துக்குட்டி என தொடர்ந்து நிரூபித்து வருகிறார். கடந்த பத்தாண்டகளாக அமைச்சராக நான் இருந்துள்ளேன். உலகத்தில் என்னை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொரோனா காலகட்டத்தில் மக்களை காப்பாற்றி சிறப்பாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் நிர்வாகம் செய்துள்ளார். கொரோனா காலத்தில் தமிழகத்தில் பெரும் அளவில் பரவி இருந்தாலும் அதனை கட்டுக்குள் கொண்டு வந்து மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி.  பிரதமர் மோடி கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சிறப்பாக செயல்படுவது என்று இந்தியாவில் எடுத்துக்காட்டாக கூறினார். அவரை தொடர்ந்து ஆர்.பி.உதயகுமார் மூன்று துறைகளுக்கு அமைச்சராக  சிறப்பாக செயல்பட்டுள்ளார்.


 

அண்ணாமலை ஒரு தடவையாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளாரா?


 

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எத்தனையோ புயல்கள் வறட்சிகளை சமாளிச்சு சிறப்பாக நிர்வாகம் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது உள்ள திமுக ஆட்சியில் இரண்டு புயல்களுக்கு கூட தாங்க முடியவில்லை. மூன்று முறை ஒரே தொகுதியில் நின்று சட்டமன்ற உறுப்பினராக ஆகியுள்ளேன். அண்ணாமலை ஒரு தடவையாவது தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளாரா..? எம்.ஜி.ஆரின் நூறு ரூபாய் நாணயத்தின் போது பிரதமர் மோடியை கூப்பிடாததற்கு காரணம், எம்ஜிஆர் ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்ட தலைவர். மோடி அந்த நிகழ்ச்சியில் கலந்து இருந்தார் மதவாத நிகழ்ச்சியாக பேசப்பட்டிருக்கும் அதன் காரணமாக பிரதமர் மோடியை எம்.ஜி.ஆர் இன் 100 ரூபாய் நாணய வெளியிட்டு விழா-விற்கு அழைக்கவில்லை. கலைஞரின் நூறு ரூபாய் நாணயத்தை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கிறது திமுக அரசு, ப்ளாக் டிக்கெட் போன்று அதிக தொகைக்கு விற்பனை செய்கின்றனர்.

 


எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி அளிக்க மத்திய அரசு மறுக்கிறது

 

நடிகர் ரஜினி சந்தர்ப்ப சூழ்நிலைக்காக கருணாநிதி பற்றி புகழ்ந்து பேசி வருகிறார். கடவுளை கண்டவரும் இல்லை.., எம்.ஜி.ஆர் ஐ வென்றவரும் இல்லை.., என்றும் ஒரே தலைவர் எம்ஜிஆர். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கொண்டு வருவதற்கு முழுமையாக காரணம் ஜெயலலிதா. வெளி மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை பாஜக ஆளுகிற மாநிலங்களில் நிதி ஒதுக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. மதுரையில் வருகிற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி அளிக்க மத்திய அரசு மறுக்கிறது.