தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த  தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020-ம் வருடம் ஜூன் 19-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் தந்தை மகன்உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர்  ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட  முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் சாட்சியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனை செவிலியரான கிருபை திரேனப்பு  நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார். 

இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெறhttps://bit.ly/2TMX27X*

 
 
அப்போது  தந்தை மகன் இருவரும் காவல்நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட போது இருவரின் உடலில் இருந்த காயங்களின் தன்மை குறித்தும், அவர்களின் உடல்நிலை குறித்தும், ரத்தகாயங்கள் மற்றும் ரத்த உரைதல் இருந்த நிலையில் இருந்ததால் அதற்கான ஊசி செலுத்தியது தொடர்பாகவும் சாட்சியம் அளித்தார். இதையடுத்து சாட்சியத்திடம் குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் தரப்பினர் தரப்பில் வழக்கறிஞர்களும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் நேரடியாகவும் சாட்சியிடம் குறுக்கு விசாரணை நடத்தினா்  வழக்கு விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி பத்மநாபன் வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் நவம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். 
சாத்தான்குளம் தந்தை - மகன் தொடர்பான வழக்கில் முந்தைய விசாரணை குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும் - பென்னிக்ஸும் ஜெயராஜும் காயங்களுடன் வந்தனர் - மருத்துவமனை பணியாளர் சாட்சியம்
 
இந்த வழக்கில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மகள் பெர்சி மற்றும் உறவினரான தேசிங்ராஜா, ஜெயராஜின் நண்பர்கள்  உள்ளிட்டோரிடமும் சாட்சியம் விசாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.