சொத்து விற்பனை பத்திர பதிவின் போது தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் செய்ய 15.57 லட்சம் ஆவணங்களுக்கு பதிவுத்துறை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், வருவாய் துறை காலதாமதமாக செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Continues below advertisement

தற்போது உள்ள சுழலில் நிலம் ,வீட்டு மனை போன்ற சொத்துக்கள் வாங்குவோர்கள் அதற்கான பட்டா, சிட்டாக்களில் பெயர் மாற்றம் செய்ய வேண்டியதில் பல்வேறு சிக்கல்களையும் , சிரமங்களையும் சந்தித்து வருகின்றனர்.  அதனை சீரமைக்கவும் எளிதில் வீட்டு மனை, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவோர் சொத்துக்களை வாங்கிய பின் அதற்கான பட்டாவில் பெயர் மாறுதல் பெறுவதற்கான நடவடிக்கைகளை எளிமைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Continues below advertisement

ஒரு நிலத்தை வாங்கிய பின்பு அதனை உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத முழு சொத்தும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு கைமாறும் நிலையில் பத்திரப்பதிவை அடிப்படையாக வைத்து பட்டாவில் மாறுதல் செய்யும் திட்டம் 2019ல் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் 2020 முதல் அனைத்து பத்திரபதிவு அலுவலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் பத்திரப்பதிவின் போது சொத்து இருப்பவர் வாங்குவோர் தொடர்பான அடையாள ஆவணங்களையும் முந்தைய பட்டா விபரங்களையும் சரி பார்த்து பத்திரப்பதிவாளர் உறுதி செய்தால் போதும். அந்த விபரம் பத்திரப்பதிவு துறையின் ஸ்டார் 2.0 ஆப் மூலமாக  வருவாய் துறையின் தமிழ் நிலம்  என்ற வெப்சைட் தகவல் தொகுப்புக்கு சென்று விடும் அதன் அடிப்படையில் சொத்து வாங்கியவர் பெயருக்கு பட்டா மாறுதல் செய்யப்படும்.

ஆனால் இப்பணிகளை பாதியில் முடக்கும் நோக்கத்திலேயே வருவாய்த்துறை அலுவலர்கள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. உதாரணமாக ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆண்டுக்கு ஆயிரம் பட்டா மாறுதல் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளித்தால் அதில் 500க்கும் குறைவான விண்ணப்பங்களுக்கு மட்டுமே வருவாய் துறையில் பட்டா மாறுதல்  நடப்பதாக புகார் கூறப்படுகிறது.

பட்டா மாறுதல் செய்யப்படும்போது ஆதாயம் பெறுவதற்காக ஏதேனும் காரணங்களை கூறி விண்ணப்பங்களை வருவாய்த்துறை அலுவலர்கள் முடக்குவதாக தொடர்ந்து புகா எழுந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. ஆனால் இது குறித்து பத்திரப்பதிவுத்துறை சார்பில் தெரிவிக்கப்படுவதாக  கடந்த 2024 இல் 15 ஆயிரத்து 57 லட்சம் பத்திரங்கள் அடிப்படையில் பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது எனவும், நடப்பு ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1.2 இலட்சம் பட்டா மாறுதல்கள் விண்ணப்பங்களுக்கு பத்திரப்பதிவாளர் நிலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதும், ஆனாலும் இவற்றில் பாதி அளவுக்கான விண்ணப்பங்களுக்கு மட்டுமே பட்டா மாறுதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து விபரங்களையும் சார் பதிவாளர் சரிபார்த்து உறுதிப்படுத்திய நிலையில் வருவாய்த் துறையில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை . அத்துடன் பட்டா மாறுதல் முடிக்கப்பட்ட கோப்புகள் எண்ணிக்கையை வெளியிடவும் வருவாய் துறை மருத்து வருகிறது என்று அதன் வட்டாரத்தில் கூறப்படுகிறது.