Madurai Hc: ஆவுடையார் பொன்கவசம் வழக்கு; ராமநாதபுரம் ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

உலகப்பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆவுடையார் பொன்கவசத்தை மீட்க உத்தரவிடக்கோரிய வழக்கு.

Continues below advertisement

ஆவுடையார் பொன்கவசம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைஆணையர் தரப்பில் பதிலளிக்க  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

Continues below advertisement

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஐயர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘ராமேஸ்வரத்தில் உலகப்புகழ்பெற்ற ராமநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ராமாயண காலத்து தொடர்புடையதோடு, ஸ்ரீ ராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம் இங்கு உள்ளது. ராமநாதசுவாமிக்கு ராமர் நெய்யப்பட்டதாக கூறப்படும் ஆவுடையார் பொன்கவசம் கடந்த 2015க்கு பிறகு ராமநாதசுவாமிக்கு அணிவிக்கப்படவில்லை. இந்த ஆவுடையார் பொன்கவசம் 2015ம் ஆண்டு சேதமடைந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆவுடையார் பொன்கவசம் குறித்து தகவல் அறியும் உரிமைச்சட்டம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, அது குறித்து எந்த தகவலும் கொடுக்கப்படவில்லை. 

நித்தியப்படி சாத்த வேண்டும்

ஆவுடையார் பொன்கவசத்தை ராமநாதசுவாமிக்கு நித்தியப்படி சாத்த வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஸ்ரீ ராமரால் ராமநாதசுவாமிக்கு நெய்யப்பட்ட ஆவுடையார் பொன்கவசத்தை மீட்டு, சுவாமிக்கு அதனை நித்யப்படி சாத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலமேகம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆவுடையார் பொன்கவசம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்தார். அப்போது, ஆவுடையார் பொன்கவசம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில்  பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ தாக்கம்; குணா குகை பகுதியில் அத்துமீறி நுழைந்த இளைஞர்கள் - கொடைக்கானலில் நடந்தது என்ன?

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பத்மஸ்ரீ விருது பெற்ற சின்னப்பிள்ளைக்கு "கலைஞரின் கனவு இல்லம்" திட்டத்தில் வீடு கட்டும் பணி தொடக்கம்!

Continues below advertisement