Just In

உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி

“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு

எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்

Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?

"என்னுடைய சாதி பத்தியே அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்" என்ன சொன்னார் துணை ஜனாதிபதி தன்கர்?
Shiva Rajkumar | "எங்க அண்ணன்டா கமல்" கொந்தளித்த நடிகர் சிவராஜ் குமார்! கன்னட வெறியர்களுக்கு பதிலடி
Special Train : இதுதான் தீபாவளி ஸ்பெஷல்..! நெல்லையில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரயில்..!
தீபாவளி பண்டிகை வரும் 24-ம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் ரயில்வே நிர்வாகம் பல்வேறு சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது.
Continues below advertisement

சிறப்பு ரயில்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருநெல்வேலியில் இருந்து பீகார் மாநிலம் தானாப்பூர் ரயில் நிலையத்திற்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி திருநெல்வேலி - தானாப்பூர் சிறப்பு ரயில் (06190) அக்டோபர் 18 மற்றும் அக்டோபர் 25 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை 03.00 மணிக்கு புறப்பட்டு மதுரை, பழனி, கோயம்புத்தூர், சேலம் வழியாக சென்று வியாழக்கிழமைகளில் மதியம் 02.30 மணிக்கு தானப்பூர் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தானாப்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06189) அக்டோபர் 21 வெள்ளிக்கிழமை அன்று மாலை 06.50 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக பயணித்து திங்கட்கிழமை அதிகாலை 04.20 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
தானாப்பூர் செல்லும் சிறப்பு ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, போத்தனூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர், கவாலி, ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கல்கலூர், பீமாவரம் நகர், தனுகு, நீடாவாலு, ராஜமுந்திரி, சாமல்கோர்ட், துனி, அனகாபள்ளி, துவாடா, விஜயநகரம், பொப்பிலி, பார்வதிபுரம், ராயகடா, முனியகுடா, கேசிங்கா, டிட்லகார், பாலங்கீர், பர்கர் ரோடு, சம்பல்பூர், ஜர்சுகுடா, ரூர்கேலா, சக்கரத்தார்பூர், பருலியா, ஜோய்ச்சண்டிபகர், அசன்சால், சித்தரஞ்சன், மதுப்பூர், ஜசித், ஜாஜா, கியூல், மொகமெக், பக்தியார்பூர் பாட்னா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sathankulam Case : "விசாரணைக்கு வருபவர்களை அடிப்பதே வழக்கம்.."- சாத்தான்குளம் காவல்துறையினருக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம்
தானாப்பூர் - திருநெல்வேலி ரயில் கோயம்புத்தூர், போத்தனூர், பொள்ளாச்சி, பழனி, ஒட்டன்சத்திரம் வழியாக இயக்கப்பட மாட்டாது. சேலம், ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி, ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.