முன்னாள் முதல்வரர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளம் அருகே  கைலாசபட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் தேனி மாவட்ட ஆதரவாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேனி மாவட்டத்திலிருந்து 200க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்கேற்றதில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு குறித்து நிர்வாகிகளிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக  ஆலோசனை மேற்கொண்டார்.


CM Stalin: தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் : பட்ஜெட் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்




மேலும் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்திப்பின் போது, மத்திய பட்ஜெட் குறித்து கேட்ட கேள்விக்கு மத்திய பட்ஜெட் நல்ல பட்ஜெட்.  மூன்றாவது முறையாக பிரதமராகியுள்ள மோடி தலைமையிலான ஆட்சியின் முதல் பட்ஜெட் இந்தியாவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்லும் பட்ஜெட் எனவும், அடுத்து வரக்கூடிய 10 ஆண்டுகளில் அடைகின்ற இலக்கை 5ஆண்டுகளில் அடைவோம் என்று கூறி, மூன்றாவது முறையாக, பிரதமராக பதவியேற்ற பின் மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட், நல்ல பட்ஜெட் எனக் கூறி வரவேற்றதோடு  அவர்களுக்கு எனது வாழ்த்து என தெரிவித்தார்.


பட்ஜெட் பரபரப்புக்கு மத்தியில் ராகுல் காந்தியைச் சந்தித்த அமைச்சர் அன்பில்- என்ன காரணம்?




மேலும் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சிறப்பு நிதி ஒதுக்கீடு என்பது சில காரணங்களின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. இதில் கூட்டணி, அரசியல் என எந்தவித காரணங்களும் கிடையாது. தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறார்.




பீகாரில் ஏற்பட்ட வெள்ள சேத பாதிப்புகளுக்கு மத்திய பட்ஜெட்டில்  11,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ள மத்திய அரசு, தமிழகத்தில் ஏற்படும் வெல்ல சேதங்களுக்கு அரசு கேக்கும் நிதியை ஒதுக்குவதில்லை என கேட்டபோது, பாதிப்புகளுக்கு உண்டான அரசாணையின்படி தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கிடையே எந்தவித பாகுபாடும் மத்திய பாஜக அரசு பார்ப்பதில்லை என ஓபிஎஸ் பதில் அளித்தார்.