மோசடி புகாரில் நியோ மேக்ஸ் நிதி நிறுவன இயக்குநர்கள் கைது; நீதிமன்ற காவலில் அடைக்க மாவட்ட நீதிமன்றம் உத்தரவு
26 ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டதை இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Continues below advertisement
மாவட்ட நீதிமன்றம்
நியோ மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் (Neomax Private Limited ) என்ற நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் முதலீடு செய்யும் பணத்தினை இரட்டிப்பாக தருவதாகவும் மாதம் 12 முதல் 30 சதவீத வட்டி தருவதாகவும் தெரிவித்ததன் அடிப்படையில் பல்வேறு நபர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.
ஆனால், முறையாக பணத்தை திரும்ப வழங்காமல் மோசடியில் ஈடுபட்டதால் முதலீடு செய்த நபர்கள் மதுரை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்ததன் அடிப்படையில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநரான வீரசக்தி உள்ளிட்ட சிலர் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் இந்த நிதி நிறுவனத்திற்கு சொந்தமான கிளை நிறுவனங்களான 17 நிறுவனங்கள் சீல் வைக்கப்பட்டு விலை உயர்ந்த கார்கள் தங்கம் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து குற்றவாளிகளை கைது செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நியோமேக்ஸ் நிதி நிறுவனம் திருநெல்வேலி கிளை நிறுவனத்தின் இயக்குநர் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சார்ந்த சைமன் ராஜா மற்றும் தேவகோட்டை பகுதியைச் சார்ந்த கபில் என்கின்ற இயக்குநரும் இருவரும் தற்போது பொருளாதார குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு மதுரை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையடுத்து 26 ம் தேதி வரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஜோதி உத்தரவிட்டதை இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கோயிலுக்குள் பட்டியல் இன மக்களை அனுமதி மறுப்பவர்களை, குண்டர் சட்டத்தில் கைது செய்யலாம் - உயர்நீதிமன்றம்
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனியில் வயதான தம்பதியை தாக்கி நகை பறிப்பு; கொள்ளையர்கள் 2 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
Just In
‘ஆட்சி அதிகாரத்தில் உரிமை‘; களமிறங்கிய அன்புமணி - என்ன சொல்லி இருக்கார் பாருங்க
Tamil Nadu Roundup: எடப்பாடி நம்பிக்கைக்கு ஷாக் கொடுத்த அன்புமணி, அரசு போட்ட திடீர் ஆர்டர் - தமிழ்நாட்டில் இதுவரை
மேல் உதட்டுப் பிளவு சிக்கல்.. தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை
TN weather Reoprt: ரெடியா? ஒரு வாரத்திற்கு வெளுக்கப் போகும் கனமழை, எங்கெல்லாம் ரெட் அலெர்ட்? வானிலை அறிக்கை
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா
ஐடிஐ மாணவர் தலையில் கல்லைப்போட்டு, உடலை எரித்துக்கொலை... மதுரையில் நடந்தது என்ன?
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.