நாகர்கோவில் - கச்சக்குடா ரயில் சேவை நீட்டிப்பு:


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கச்சக்குடா - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் இரண்டு மாதங்களுக்கு  நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி கச்சக்குடாவில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும் கச்சக்குடா - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (07435) பிப்ரவரி 2 முதல் மார்ச் 29 வரை இயக்கப்படும்.


மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில்இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 12.30 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் காலை  06.30 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும் நாகர்கோவில் - கச்சக்குடா வாராந்திர சிறப்பு ரயில்  (07436) பிப்ரவரி 4 முதல் மார்ச் 31 வரை இயக்கப்படும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் மற்றும் 2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள்  ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.





தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு


மதுரை வழியாக இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்கள் சேவை ஜனவரி மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து மாலை 04.35 மணிக்கு புறப்படும் தாம்பரம் சிறப்பு ரயில் (06012) பிப்ரவரி 04, 11, 18, 25 மற்றும்  மார்ச் 3, 10, 17, 24, 31ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து காலை 08.05 மணிக்கு புறப்படும் நாகர்கோவில் சிறப்பு ரயில் (06011) பிப்ரவரி 5, 12, 19, 26, மார்ச் 04, 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு இரவு 08.55 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஜனவரி 31) காலை 8 மணி முதல் துவங்க இருக்கிறது.


 

திருநெல்வேலி -  மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு










 

அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், மதுரை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை ஜனவரி மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 07.00 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) பிப்ரவரி 04, 11, 18, 25 மற்றும்  மார்ச் 3, 10, 17, 24, 31ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) பிப்ரவரி 5, 12, 19, 26, மார்ச் 04, 11, 18, 25 மற்றும் ஏப்ரல் 1 ஆகிய திங்கட்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஜனவரி 31) காலை 8 மணி முதல் துவங்க இருக்கிறது.