Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (21.09.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது. 

 

மின் பாதையில் பராமரிப்பு பணிகள்

 

தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.

 

தமிழ்நாடு மின் வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு

 

இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது,  சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம்  மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை கிழக்கு செயற்பொறியாளர் இரா.கண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது;


 

மின்விநியோகம் தடைபடும் ஊர்களின் பெயர்கள்:






 

முத்துபட்டி, சிதம்பரம்பட்டி, அயிலான்குடி, சிட்டம்பட்டி, அப்பன் திருப்பதி, கைலாசபுரம், மாங்குளம், செட்டிகுளம், கண்டமுத்துபட்டி, லெட்சுமிபுரம், வெள்ளரிபட்டி, அரும்பனூர், மலையாண்டிபுரம், புதுப்பட்டி, தேத்தாங்குளம், பட்டணம், ரைஸ்மில், அரிட்டாபட்டி, கல்லம்பட்டி, விநாயகபுரம், சூரகுண்டு, தெற்குதெரு, மருதூர், பூலாம்பட்டி, திருக்கானை, இலங்கிபட்டி, காயாம்பட்டி, வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், ஆமூர், இடையப்பட்டி, எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, மேலவளவு, பட்டூர், கேசம்பட்டி, அரிட்டாபட்டி, ஆலம்பட்டி, சேக்கிப்பட்டி, ஆ.வல்லாளப்பட்டி, திருவாதவூர், கட்டயம்பட்டி, கொட்டக்குடி, சாணிபட்டி, புலிப்பட்டி ஆகிய பகுதிகள்.

 

ஒத்தக்கடை துணை மின்நிலையம்

 


ஒத்தக்கடை, நரசிங்கம், வௌவால் தோட்டம், விவசாய கல்லூரி, அம்மாப்பட்டி, காளிகாப்பான், ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி, ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி ஆகிய பகுதிகள்.

 


மேலூர் துணை மின்நிலையம்

 

மேலூர், தெற்குதெரு, T.வள்ளாலப்பட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டி, பதினெட்டாங்குடி, பனங்காடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள் நாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாம்குடி, பனங்காடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.

 

பனையூர் துணை மின்நிலையம்

 

பனையூர், சொக்கநாதபுரம், அய்யனார்புரம், சாமநத்தம், பெரியார் நகர்,கல்லம்பல், சிலைமான், கீழடி மற்றும் அதற்குட்பட்ட பகுதிகள்.

 

அதே போல் திருமங்கலம் துணைமின் நிலையம் பகுதியில்

 

திருமங்கலம் நகர், ஜவகர்நகர், சியோநகர், என்.ஜி.ஒ காலனி, பி.எம் நகர், அசோக் நகர், முகமதியாபுரம், சோனை, மீனாநகர், சந்தைப்பேட்டை, செங்குளம், பகவத்சிங் தெரு, கற்பக நகர், கலை நகர், கரிசல்பட்டி, பாண்டியன் நகர், பொற்காலம் நகர், மறவன்குளம், நெடுமதுரை, கூடக் கோவில், உலகாணி, சித்தலை, சாத்தங்குடி, புதுப்பட்டி, ஆழம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, உரப்பனூர் அதற்குட்பட்ட பகுதிகள்.