திருப்பதி லட்டுக்கு அறிமுகம் தேவை இல்லை. அந்த அளவுக்கு இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவிலும் பிரபலமான ஒரு கோவில் பிரசாதமாக அறியப்பட்டது. தினமும் குறைந்தபட்சம் 3 லட்சம் லட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல லட்டு விற்பனையால், ஆண்டுக்கு சுமார் 500 கோடி ரூபாய் வருமானம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது எழுந்துள்ள விலங்கு கொழுப்பு சர்ச்சை, சமூக வலைதங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தரக்கட்டுப்பட்டு துறை அதிகாரிகள் ஏஆர் நிறுவனத்தில் சோதனை செய்த பின்  திருப்பதி தேவஸ்தானத்திற்கு திண்டுக்கல் ஏ ஆர் நிறுவனத்தில் இருந்து அனுப்பப்பட்ட நெய் தரமானதே என நிறுவனத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் லெனி மற்றும் கண்ணன் கூறும் போது,




"திண்டுக்கல் ஏ ஆர் நிர்வாகத்தின் நபராக நான் முன்பு நின்று பேசிக் கொண்டு வருகிறேன். தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பியது ஜூன் ஜூலை என இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக அனுப்பியுள்ளோம். தற்போது அங்கு நெய் அனுப்புவது கிடையாது. தற்போது நிறுவனத்தின் மீது நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஒரு செய்தி வருகிறது. அதில் எங்களது நிறுவனத்தின் பெயர் இல்லை அதில் உள்ள செய்திகளை வைத்து தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எங்களுடைய தயாரிப்பில் குறை இருக்கு வெளிப்படுத்தும் பட்சத்தில் இருந்தால் எங்களது நெய் எல்லா இடத்திலும் உள்ளது. அதனை செக் செய்யலாம். அதன் தரத்தில் எந்த குறைபாடுகளும் இல்லை.




எங்கள் நிறுவனத்தின் மீது தொடரப்படும் குற்றங்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக எங்களது நிறுவனத்தின் பொருள்களை செக் செய்து கொள்ளலாம். 25 வருடத்திற்கு மேல் இந்த துறையில் இருந்து வருகிறோம். இந்த மாதிரி எங்களது பொருட்களின் தரத்தை இப்படி வெளிப்படுத்துனது கிடையாது. இது எங்களின் விளக்கம். எங்களது நிறுவனத்தின் தயாரிப்பில் 0.5 சதவீதம் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பியுள்ளோம். எங்களது பொருட்கள் பல இடங்களில் விற்பனைக்காக உள்ளது. அங்கு சென்று எங்களது பொருட்களின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம்.




எங்களது ஆய்வுக்கூடத்தின் அறிக்கை எங்களிடம் உள்ளது மேலும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் பொழுதும் தர கட்டுப்பாட்டு துறை மூலம் ஆய்வு செய்துள்ளோம். அதில் எங்களது ஆய்வு அறிக்கையையும் அனுப்பியுள்ளோம். லட்டு தயாரிப்புக்காகவே நெய் அனுப்பப்பட்டது. அங்கு ஒப்பந்தம் போடப்பட்டது நெய் அனுப்பப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு நெய் அனுப்பிய பல பேர் உள்ளனர் அதில் நாங்களும் ஒருவர். நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம் கூட கிடையாது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும் நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.




அவர்கள் கூறிய பின்பும் தற்போது மீண்டும் பரிசோதனை செய்துள்ளோம். தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது. அவர்களிடமிருந்து எங்களுக்கு எந்த ஒரு பதிலும் வரவில்லை ஆனால் எங்கள் தரப்பில் இருந்து அனைத்து ஆய்வறிக்கைகளும் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தில் ஆய்வு செய்ததில் எந்த ஒரு குறைகள் இல்லை எனவே வந்துள்ளது. எங்களிடம் எங்களது ஆய்வுக்கான அறிக்கைகளும் திருப்பதி தேவஸ்தானத்தின் ஆய்வருக்கைகளும் உள்ளன. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஐஎஸ்ஐ அக்மார்க் ஆகியோர் எங்களிடமிருந்து சாம்பிள் எடுத்து சென்றுள்ளனர் அதில் இதுவரை எந்த ஒரு குறைகளும் இல்லை என்றனர்.