மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 25, 2025, திங்கள்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
 
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்
 
* மதுரை காளவாசல்-தேனி மெயின் ரோடு,
 
* திருமலை காலனி, * பல்லவன் நகர், * பாரதியார் தெரு,
 
* வ.உ.சி.,தெரு, * முடக்குச்சாலை, * நடராஜ் நகர்,
 
* இந்திராணி நகர், * பிள்ளையார் கோயில் தெரு, * ஐ.என்.டியு.சி.,
 
* காலனி, * இ.பி. காலனி, * அண்ணா மெயின் வீதி,
 
* மூக்கையாத்தேவர் தெரு, * திலீபன் தெரு, * பாண்டியரா ஜபுரம்,
 
* மேட்டுத்தெரு, * பெத்தானியாபுரம், * பென்னர்,
 
* டோக் நகர், * முத்து நகர், * ராமசாமி முதலியார் தெரு,
 
* வேளாண்மை தெரு, *  சாந்தி சதன்.
 
திருப்பரங்குன்றம்
 
* எம்.கே.எம். நகர்,
 
* கல்குளம், * திருப்பரங்குன்றம் ரோடு, *  திருப்பதி நகர்,
 
* முல்லை நகர், * பெரியசாமி நகர், *  புரசரடி,
 
* எஸ்.கே.ஆர் நகர், * சந்தோஷ்நகர், * குமரன் நகர்,
 
* பாம்பன் நகர், * அவனியாபுரம் ரோடு, * ராஜிவ்காந்தி நகர்,
 
* திருப்பரங்குன்றம், * காசித்தோட்டம், * பெரியரதவீதி,
 
* திருப்பரங்குன்றம் கோயில், * கீழரத வீதி,
 
திருப்பாலை  - அய்யர்பங்களா
 
* திருப்பாலை, * நாராயவள்ணபுரம், * ஆத்திகுளம், * அய்யர்பங்களா
 
* வள்ளுவர் காலனி, * குலமங்கலம், * கண்ணனேந்தல்,
 
* பரசுராம்பட்டி, * சூர்யாநகர், * ஊமச்சிகுளம்,
 
* கடச்சனேந்தல், *  மகாலட்சுமி நகர், * உச்சபரம்புமேடு,
 
* பார்க்டவுன், * பிஅண்ட் டி காலனி, * பாமா நகர், * பம்பா நகர்,
 
* பொறியாளர் நகர், * டுவார்டு காலனி, * சொட்டிகுளம்,
 
* சண்முகா நகர், * விஜய் நகர், * கலைநகர், * மீனாட்சி நகர், * இ.பி.காலனி.
 
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

 பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.