சீமான் பொது இடங்களில் பெண்கள் குறித்து மரியாதையாக பேசவேண்டும்; முகம் சுளிக்கும் அளவிற்கு பேசி வருகிறார் என செல்லூர் ராஜூ பேட்டியளித்துள்ளார்.

செல்லூர் ராஜூ பேட்டி


முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மதுரை பழங்காநத்தம் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பொதுமக்களுக்கு உணவுகளை வழங்கினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளரை சந்தித்து பேசுகையில், “தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறு ஓடுகிறது என்றும், தமிழ்நாட்டின் சிறுமி முதல் பாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகாமல் இருக்கின்றனர் என்றும், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் தமிழ்நாட்டில் 90% நிறைவேற்றி விட்டார்கள். இவ்வாறு எல்லாமே செஞ்சிட்ட அப்புறம் எதுக்கு முதல்வர். கூட்டணி கூட்டணினு சொல்றாரு. கொள்கை கூட்டணி அவர் தான் கூறுகிறாரே தவிர அவருடன் இருப்பவர்கள் யாரும் கூறவில்லை. இதில் இருந்தே தெரிகிறது, ஏதோ வீக்னஸ் இருக்கு என்று. அரசின் மீது மக்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.

 

கொடியேற்றுவதில் சிக்கல் இருப்பதாக திருமாவளவன் தெரிவிக்கிறாரே..


 

திருமாவளவன் கூறியதை இதன் வாயிலாக முதல்வருக்கு டெடிகேட் பண்ணுகிறேன். முதல்வர் தான் கூட்டணிக்குறித்து பேசுகிறாரே தவிர அவருடன் உள்ளவர்கள் யாரும் கூட்டணி குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை. திருமாவளவன் நொந்து நூலாகிவிட்டார். வேங்கை வயல் விவகாரத்தில் தீர்வு காணவில்லை., திமுக எம்எல்ஏ வீட்டில் பட்டியலின சிறுமி தாக்குதலுக்கு ஆளாகப்பட்டு இதுவரை அதற்கு தீர்வு காணப்படவில்லை. தற்போது கூட்டணி கூட்டணி என்று இருக்கும் திருமாவளவன், எப்படி இருந்தேன் இப்படி ஆயிட்டேன் என்பது போல தான் அவர் நிலைமை உள்ளது. இந்த ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்த அரசு ஊழியர்களுக்கு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கம்யூனிஸ்ட் கட்சியினர் போராடுகிறார்கள். இந்த அரசு தூக்கிப்பிடித்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இன்றைக்கு திமுக அரசை எதிர்க்கிறார்கள். தமிழக முதல்வர் கைகால் பிடித்து இந்த ஆட்சியை தக்க வைக்க நினைக்கிறார். அதிமுக விஜய்க்கு கூட்டணி அழைப்பு விடுத்தோமா என்று அவர்கள்தான் கூறவேண்டும். எடப்பாடி தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புவோர் கூட்டணிக்கு வரலாம்.

 

முகம் சுழிக்க வைக்கும் சீமான்


 

தாய்மார்களை மதிக்கக் கூடிய கட்சி அதிமுக. பெண்ணுக்கு ஒரு இன்னல் என்றால் எங்கிருந்து எந்த தொல்லை வந்தாலும் அதிமுகவினர் பெண்களுக்கு ஆதரவாக உடன் இருக்கும். தமிழ்நாட்டில் நடக்கிற வன்முறை தமிழ்நாட்டில் போகிறார்கள். சீமான் முதலில் பெண்களை வைத்துக் கொண்டேன் ஒரு பெண்ணை பற்றி இழிவாக பேசுகிறார். அவர் பேச்சு அனைவரது முகத்தையும் சுளிக்க வைக்கிறது.

 

அமைச்சர் மூர்த்தி மதுரை மேற்கு தொகுதியில் பணி செய்வது குறித்த கேள்விக்கு


 

மேற்கு தொகுதி அதிமுகவின் கோட்டை இங்கே யார் வந்தாலும் எந்த பருப்பு வேகாது. சாதாரண தொண்டரைக் கூட நிறுத்தினால் அதிமுக வெற்றி பெறும். முதலில் மதுரைக்கு சிறப்பு நிதியை வாங்கி தாருங்கள். திட்டத்தைக் கொண்டு வாருங்கள். அமைச்சர் மூர்த்திக்கு சவால் விட்டார். அமைச்சர் மூர்த்தி வந்தார். கல்யாண மண்டபம் கட்டினார் என்பது பெரிதல்ல.? மக்களுக்கு என்ன செய்தார்..? என்பது தான் கேள்வி” என பேட்டியளித்தார்.