கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனத்திற்கு கட்டண விலக்கு இருந்தும் வாகன ஓட்டிகளிடம் அடாவடி வசூலில் ஈடுபட்டதால் 500-க்கும் மேற்பட்டோர் வாகனங்களுடன் வழிமறித்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் கன்னியாகுமரி சாலை ஸ்தம்பித்தது. 




மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி கடந்த 12 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது  இங்கு சர்வீஸ் சாலையை பயன்படுத்தி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டிருந்தது மேலும் திருமங்கலம் நகர் பகுதியில் கப்பலூர் சுங்கச்சாவடியில் உள்ளூர் வாகனங்களுக்கு அடிக்கடி கட்டணம் கேட்டு வசூல் செய்ததால் வாகன ஓட்டிகள் அடிக்கடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனால் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது மேலும் ராஜபாளையம் டி.கல்லுப்பட்டி வழியாக செல்லும் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே சுங்கச்சாவடியை பயன்படுத்துவதால் அவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது மேலும் கடந்த 20 தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் பேச்சுவார்த்தை நடத்தி திருமங்கலம் தொகுதி மக்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.




ஆனால் கடந்த இரு தினங்களாக டி.கல்லுப்பட்டி பகுதி வாகனங்களுக்கு சுங்கச்சாவடி ஊழியர்கள் அடாவடி வசூல் ஈடுபட்டு வருவதால் அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது இந்நிலையில் இன்று டி.கல்லுப்பட்டி  வாடகை வாகன உரிமையாளர்கள் பொதுமக்கள் இப்பகுதியில் வாடகை வாகனங்கள் சொந்தக்காரர்கள் மற்றும் லாரிகளை  நிறுத்தி சுங்கச்சாவடியில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்


திருமங்கலம் பகுதியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் சுங்கச்சாவடி அமைந்துள்ளதால் உள்ளூர் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவையும் மீறி அடிக்கடி உள்ளூர் வாகனங்களுக்கு டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் கேட்டு வாக்குவாதம் அடிதடியில் ஈடுபடும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது.





இந்த முற்றுகை போராட்டம் சுமார் 2 மணி நேரமாக நீடித்தது. மேலும் வாகனங்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரிசையாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கோட்டாட்சியர் அனிதா மற்றும் காவல்துறை அதிகாரிகள் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து வாகன உரிமையாளர்கள் தங்களது இரண்டு மணி நேர போராட்டத்தை கைவிட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண