சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட  மருத்துவ கல்லூரிகளில் பயின்ற பல மாணவ, மாணவிகள் உயர் மருத்துவ கல்வி பயில்வதற்க்கு தங்களின் MBBS கல்வி சான்றிதழ்களை தங்களிடம் ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில்,

 

* மனுதாரர்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டதாரி படிப்பிற்கு சேரும் பொழுது அரசிற்கு 2 ஆண்டுகள் மருத்துவ சேவை பணியாற்ற வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. இதில், தவறும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் உள்ளது. மனுதாரர்கள் மருத்துவ படிப்பினை முழுவதுமாக நிறைவேற்றியுள்ளார் மேலும் கொரானா காலகட்டத்தில் பணியாற்றியுள்ளதாகவும் எனவே மேலும் பணியாற்ற அவசியமில்லை எனவும் தங்களது மருத்துவ கல்வி சான்றிதழ் களை தங்களிடம் வழங்க வேண்டும் என தெரிவிக்கின்றனர்.

 

இதனை ஏற்று கொண்ட  நீதிபதி மருத்துவ உயர்கல்வி பயில உள்ள மருத்துவ மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தார்.

 

 



மற்றொரு வழக்கு


2வது மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைள் உள்ளனர். மனைவி இறந்ததால், 2008ல் குத்தாலம் என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் குழந்தைகளை முறையாக பராமரிக்காமல் இருந்துள்ளார். இதனால் கடந்த 2013ல் குத்தாலத்தை கழுத்தை நெறித்து கொலை செய்து, தூக்கில் தொங்க விட்டுள்ளார். தற்கொலை வழக்காக பதிவு செய்த குற்றாலம் போலீசார். பின்னர் கொலை வழக்காக மாற்றி கண்ணனை கைது செய்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த தென்காசி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கடந்த 19.8.2019ல் கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து கண்ணன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு செய்தார்.

 

இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தென்காசி நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தனர். மனுதாரர் மீதமுள்ள தண்டனை காலத்தை சிறையில் அனுபவிக்கும் வகையில் உடனடியாக அவரை சிறையில் அடைக்க வேண்டுமென உத்தரவிட்டனர்.