Watch video | உசிலம்பட்டியில் நடந்தது பெண் சிசுக்கொலையா? - உடலை தோண்டியெடுத்து உடற்கூறாய்வு
உடற்கூறு ஆய்வு முடிவுகள் மருத்துவ குழுவினர் அறிக்கையாக தாக்கல் செய்த பின்பு தான் பெண் சிசு உயிரிழந்தது தொடர்பாக தெரியவரும் என கூறப்படுகிறது
Continues below advertisement

தோண்டி எடுக்கப்படும் சிசுவின் உடல்
மதுரை உசிலம்பட்டி அடுத்த பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ”கௌசல்யா - முத்துப்பாண்டி” தம்பதியர். இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே நான்கு மற்றும் இரண்டு வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி சேடப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தாக பிறந்துள்ளது. இந்நிலையில் பிறந்த இந்த பெண் குழந்தை உடல்நல குறைவு காரணமாக 26ஆம் தேதி காலையில் உயிரிழந்தாக யாருக்கும் தெரியப்படுத்தாமல் மறைமுகமாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
Continues below advertisement
பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த கிராம செவிலியரிடம் முன்னுக்கு பின் முரணான பதில்களை பெற்றோர் தெரிவிக்கவே சந்தேகமடைந்த கிராம செவிலியர் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் தகவல் அளித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் முனியாண்டி விசாரிக்கும் போதும் முறையான பதில் இல்லாததால் இந்த சம்பவம் தொடர்பாக சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் முத்துப்பாண்டி - கௌசல்யா வீட்டிற்கு சென்ற போது பெற்றோர்கள் தலைமறைவானது தெரிய வந்துள்ளது. மேலும் பெற்றோர்கள் தலைமறைவாக இருப்பதால் பெண்சிசு கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் பெற்றோர்களை தேடி வருகின்றனர். உசிலம்பட்டி பகுதியில் மீண்டும் பெண்சிசு கொலை அரங்கேறி இருக்குமோ என்ற அச்சம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மதுரை மாவட்ட காவல் கூடுதல் காவல் துணைக் காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையிலான போலீசார் , வட்டாச்சியர் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் முணியாண்டி மற்றும் சமூக நலத்துறையின் சமூக நல விரிவாக்க அலுவலர் ஜெயா தலைமையிலான அலுவலர்கள் முன்னிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பெண்சிசுக் புதைக்கப்பட்ட இடத்தில் உடலை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு செய்தனர். இந்த உடற்கூறு ஆய்வு முடிவுகள் மருத்துவ குழுவினர் அறிக்கையாக தாக்கல் செய்த பின்பு தெரியவரும் என கூறப்படுகிறது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.