மதுரை மாநகராட்சி பழங்காநத்தம் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கொழுக்கட்டையில் கரப்பான் பூச்சி இருந்ததால் பரபரப்பு

கொலுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி
 
மதுரை பழங்காநத்தம் பகுதியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடியில் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை அங்கு பயிலக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு சத்துணவு மாவு மூலமாக தயாரிக்கப்படும் கொலுக்கட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை உண்டு கொண்டிருந்தபோது திடீரென ஒரு கொலுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி, உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த சிறுமி அவரது தாயாரிடம் கொலுக்கட்டையில் பூச்சி இருப்பதாக கூறிய போது, அதனை பிரித்துப் பார்த்த தாயார் கொழுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி இருப்பது தெரியவந்தது.
 
மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட சிறுமி
 
இதனால் பதட்டமடைந்த சிறுவனின் தாயார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் இல்லை, என கூறியதால் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர். 
 
அங்கன்வாடி பணியாளர் தற்காலிக பணிநீக்கம்
 
மதுரையில் அங்கன்வாடியில் வழங்கப்பட்ட கொழுக்கட்டைக்குள் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அங்கன்வாடியில் கொலுக்கட்டையில் கரப்பான் பூச்சி கிடந்தது தொடர்பாக செய்தி வெளிவந்த நிலையில், அங்கன்வாடி பணியாளர் கோமதி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மதுரை மாவட்ட திட்ட அலுவலர் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடதக்கது.