மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( டிசம்பர் 02, 2025, செவ்வாய்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
Continues below advertisement
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் நாளை காலை 09 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, FF ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், சின்னக்கண்மாய், தென்றல் நகர், மணிகண்டன் நகர், மயான ரோடு, அகஸ்தியர் தெரு, அன்பு நகர், காளியம்மன் கோவில், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, ஜெயவிலாஸ் முதல் வெற்றி தியேட்டர் வரை, வில்லாபுரம் TNHB புதுநகர், அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் வெற்றி தியேட்டரிலிருந்து வாசுகி தெரு வரை,LK துளசிராம் தெரு, மீனாட்சி நகர், கணபதி நகர், நல்லதம்பி தோப்பு, காவேரி தெருக்கள், செந்தமிழ் தெருக்கள், சௌடேஸ்வரியம்மன் கோவில், தாமரை தெரு, வைகை தெரு, குரு மஹால் பகுதிகள், ஓம்சக்தி நகர், பரமேஸ்வரி அம்மன் கோவில் தெரு, ஜெயபாரத் சிட்டி 1&2 வாசுகி தெரு, நந்தகோபாலன் தெரு, மற்றும் நேதாஜி தெரு, TVS நகர்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.
Continues below advertisement
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாகவும் சுகமாகவும் சமாளிக்க முடியும்.