இரண்டு அர்ச்சகர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ ரங்கம் குமாரவயலூர் முருகன் கோயில் அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்து மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த கோயிலில் நீண்டநாட்களாக அர்ச்சகர்களாக உள்ள மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.


வயலூர் முருகன் கோயிலில் தமிழ்நாடு அரசால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட  அர்ச்சகர்கள் பிரபு, ஜெயபாலன் ஆகியோர் நியமனங்களை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. நீண்ட காலமாக பணியாற்றும் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் தங்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர்.


பணி நியமனம் செய்ய கோரிக்கை 


குமாரவயலூர் முருகன் கோவிலில் தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் ஜெயபாலன்,பிரபு ஆகியோரை நியமித்தது. அப்படி இருக்கையில், இதனை எதிர்த்து அக்கோயிலில்  நீண்ட காலமாக பணியாற்றும்  கார்த்திக்,  பரமேஸ்வரன் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரி  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.


இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று (0332023) விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், பிரபு, ஜெயபாலன் ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டது குறித்தே மனுதாரர்கள் கேள்வி எழுப்பி மனுக்களைத் தாக்கல் செய்திருக்கிறார்கள்.


இந்த வழக்கை பொருத்தவரை மனுதாரர்கள் பல ஆண்டுகளாக அர்ச்சகர்களாக கோவிலில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் கோவில் அறங்காவலரால் முறையாக நியமிக்கப்படவில்லை என்றாலும், தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில்களில் பல அர்ச்சகர்கள் ஊதியம் பெறாமலேயே, கோவில்களில் தங்களின் பணியை செய்து வருகின்றனர். அந்த வகையில், ஆகம விதிகளுக்கு எதிராக குமாரவயலூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில்  நடைபெற்ற அர்ச்சகர் நியமன உத்தரவு ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தார்.


இந்த கோயிலில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோரை அர்ச்சகர்களாக நியமிப்பது தொடர்பாக கோவிலின் அறங்காவலர், எட்டு வாரங்களுக்குள்ளாக பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 




மேலும் வாசிக்க. 


Metro: மெட்ரோவில் போறீங்களா சென்னை மக்களே...! வெளியான முக்கிய அறிவிப்பு


MK Stalin : "இன்று ஈரோடு; நாளை நம் நாடு; நாற்பதும் நமதே, நாடும் நமதே" - தொண்டர்களுக்கு உற்சாக கடிதம் எழுதிய முதலமைச்சர் ஸ்டாலின்