மதுரையில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் ஆய்வுக்கு சென்ற போது குழந்தைகளை தாலாட்டு பாடி தூங்க வைத்த அங்கன்வாடி  மேற்பார்வையாளரின் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி பாராட்டுதல்களை பெற்றுவருகிறது.

 





மதுரை மாநகர்  வள்ளுவர் காலனி பகுதியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.  இந்த நிலையில் அங்கு ஆய்வுக்கு சென்ற அங்கன்வாடி மேற்பார்வையாளர் கற்பகம்பாள் என்பவர் அங்கன்வாடியில் மதிய உணவிற்கு பின்பாக அங்கன்வாடிக்கு வந்திருக்கக்கூடிய குழந்தைகளை தாலாட்டு பாடல் பாடி தூங்க வைத்து அரவணைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.



 

இந்த வீடியோவில் அங்கன்வாடி குழந்தைகளை தாயை போல பாவித்து மடியில் போட்டு தாலாட்டு பாடல் பாடி தூங்க வைக்கும் அங்கன்வாடி மேற்பார்வையாளரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்துவருகின்றனர்.