Just In

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை !

ஆடு, கோழி திருட வந்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் அடித்துக் கொலை, சிவகங்கையில் பரபரப்பு !

வார இறுதியில் முகூர்த்த நாள்கள்.. வெளியூர் போறீங்களா? இந்த வீக் கவலையே இல்ல

"இன்னிங்ஸ் வெற்றி" டெஸ்ட் போட்டியுடன் போரை ஒப்பிட்ட முப்படை தலைமை தளபதி

விவசாயிகளே உங்களுக்கு தான்...! குறுவை சாகுபடிக்கு தயாரா? ரயில் வந்தது பொக்கிஷம்!
திருச்சியில் கொரோனா... முகக்கவசம் அணியுங்கள்: கலெக்டர் எச்சரிக்கை
Holy: கன்னியாகுமரி - மும்பை இடையே ஹோலி பண்டிகை சிறப்பு ரயில் அறிவிப்பு
இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Continues below advertisement

ரயில்
கன்னியாகுமரி - மும்பை இடையே ஒரு சிறப்பு ரயில்
ஹோலிப் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க கன்னியாகுமரி - மும்பை இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (01005) மும்பையில் இருந்து மார்ச் 10 மற்றும் 17 ஆகிய திங்கட்கிழமைகளில் அதிகாலை 12.20 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 12.15 மணிக்கு கன்னியாகுமரி வந்து சேரும். மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி - மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல் சிறப்பு ரயில் (01006) கன்னியாகுமரியில் இருந்து மார்ச் 11 மற்றும் 18 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 04.15 மணிக்கு மும்பை சென்று சேரும்.
ரயில் நிலையங்களில் நின்று செல்லும்
இந்த ரயில்கள் தாதர், தானே, கல்யாண், லோனாவாலே, புனே, டௌன்ட், சோலாப்பூர், கலாபர்கி, வாடி, கிருஷ்ணா, ரெய்ச்சூர், மந்திராலயம் ரோடு, அடோனி, குண்டக்கல், கூட்டி, தாடி பத்திரி, எர்ரகுண்ட்லா, கடப்பா, ராஜம்பேட்டா, ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 9 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 5 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டி, ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரையில் புல்லட் பேரணி நடத்திய விசிக.. 170 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீஸ்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமே.. நீங்களும் பயிற்சி பெறலாம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.