தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குளங்களில் அவ்வப்போது மீன்பிடி திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்களில் மீன்களை பிடிக்க ஆண்டுதோறும் தனியாருக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். ஆனால் பல்வேறு காரணங்களால் குறிப்பாக கோடை காலங்களில் நீர் வற்றிய குளத்தில் உள்ள மீன்கள் உயிரிழக்கும் சூழலும் ஏற்படும். அதனை தடுப்பதற்கு இதுபோன்ற மீன்பிடித் திருவிழா நடத்தப்படுவது தொடர்ந்து வருகிறது. கோடை காலங்களில் தண்ணீரின்றி வற்றும்நிலை வரும்போது குளத்தை ஏலம் எடுத்தவர்கள் ஊர்மக்களுக்கு மீன்களை பிடிப்பதற்கு அனுமதி வழங்குவார்.


One year of DMK Governance : "ஓராண்டில் கடல்போன்ற சாதனை" - ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..



திண்டுக்கல் : 10 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட மீன் பிடித் திருவிழா.. பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு..


அப்போது  பொதுமக்கள் பல்வேறு விதமான மீன்களை பிடித்து செல்வர். பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் இந்த மீன்பிடி திருவிழா  பெரிய அளவில் பேசுபொருளாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் அருகே உள்ள புகையிலைப்பட்டி கிராமத்தில் வண்டிக்காரன் குளத்தில் மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டது. இந்த மீன்பிடி திருவிழாவானது வருடந்தோறும் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் புகையிலைப்பட்டி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மீன்பிடித் திருவிழா நடத்தப்படவில்லை. எனவே 10 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்த மீன்பிடி திருவிழாவானது நடத்தப்பட்டுள்ளது.


அனைத்து சாதியினரும் அர்ச்சகர் முதல் பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து வரை : திமுக அரசின் சமூகநீதி செயல்பாடுகள்




சமீபத்தில் பெய்த கன மழையால் குளத்தில் ஏராளமான நீர் வரத்து இருந்ததால் இந்த குளத்தில் உள்ள மீன்கள்  நன்கு வளர்ந்திருந்தன . இந்த சூழலில் கன்னிமார் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த மீன்பிடி திருவிழா நடத்தப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்ற இந்த மீன்பிடி திருவிழாவில் சுற்று வட்டாரங்களில் உள்ள மணியகரன்பட்டி, ராஜக்காபட்டி, கஸ்தூரி, நாயக்கம்பட்டி ,பெரியகோட்டை உள்ளிட்ட கிராமங்களில் இருந்த பொதுமக்கள் ஏராளமானோர் இந்த மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு கொண்டாடினர்.




குளத்தில் இறங்கி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்களை பிடித்து சென்றனர். குறிப்பாக விரால், கெண்டை ,ரோகு ,கட்லா ,கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகள் பிடிக்கப்பட்டன. இதில் ஆண்கள், பெண்கள் ,சிறுவர், சிறுமியர் ,மூத்த குடிமக்கள் என பலதரப்பட்டவர்கள் கலந்துகொண்டு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீன்பிடி திருவிழா மிக உற்சாகமாக நடத்தப்பட்டது.



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண