அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான முருகபெருமானின் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை காரணமாக மலையடிவாரத்தில் நெரிசல் ஏற்படுவதாகவும், கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


Latest Gold Silver Rate: புதிய உச்சம் தொட்ட தங்கம்.. அதிர்ச்சியில் மக்கள்.. சவரனுக்கு ரூ.400 உயர்ந்தது..




வழக்கை விசாரித்த நீதிமன்றம் மலை அடிவாரத்தில் கிரிவல பாதையில் வர்த்தகரீதியாக உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக் கோரியும், கிரிவல பாதையில் வாகனங்களை அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டது. இதனை அடுத்து பழனி கோயில் தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டறிந்து அகற்றி வருகிறது. மேலும் தனியார் வாகனங்கள் கிரிவலப் பாதையில் நுழைவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது.


Watch Video: ஸ்ட்ரீட் பிரீமியர் லீக்கில் கையின்றி பேட்டிங், பந்துவீசிய அமீர் ஹூசைன்.. கௌரவித்த சச்சின் டெண்டுல்கர்..!




இதனை எதிர்க்கும் விதமாக பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலை அடிவாரத்தில் நீதிமன்ற உத்தரவின்பேரில் கோயில் நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றி வருகிறது. மேலும் கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களையும் நுழைய கூடாது, கிரிவலப்பாதையில் வர்த்தக நிறுவனங்கள் கடைகள் செயல்படவும் அனுமதிக்க கூடாது  என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


Nayanthara: எல்லாம் போச்சு.. இன்ஸ்டாகிராமில் புலம்பிய நயன்தாரா .. என்ன நடந்தது?




இதைத்தொடர்ந்து, கிரிவல பாதையில் வாகனங்கள் நுழையக்கூடிய சாலைகளில் தடுப்புகள் வைத்து கோயில் நிர்வாகத்தால் தடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிவலப் பாதையில் சொந்த வீடுகளுக்கும், தங்கும் விடுதிகளுக்கும், கடைகளுக்கும் வாகனங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிரிவலப் பாதையில் தடுப்புகள் ஏற்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் இன்று கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மலையடிவாரத்தில் பஞ்சாமிர்த கடைகள், பேன்சி பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், பூஜை பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகள், உணவங்கள், தேனீர் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அடிவாரப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.