நத்தம் அருகே கனமழையால் வீடு இடிந்து சேதம் - நல் வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு

வீட்டின் ஒரு பகுதியில் இருந்த சுவர் முழுவதும் முற்றிலும் சரிந்து வீட்டின் வெளிப்பகுதியில் பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

Continues below advertisement

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்தது. இதில் நத்தம் அய்யாபட்டியை சேர்ந்த காமராஜ் கூலித்தொழிலாளி என்பவருக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் அவரும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். மற்றொரு பகுதியில் அவரது மகன் அருண் பாண்டி, மருமகள் கிரிஜா, பேத்திகள் நிஷா ஶ்ரீ, உமா ஶ்ரீ ஆகியோர் குடியிருந்து வருகின்றனர்.

Continues below advertisement

PM Modi: சக்சஸ், கிராண்ட் சக்சஸ்..! ரஷ்யா, ஆஸ்திரியா பயணங்களை முடித்துக்கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக தயார்படுத்திக் கொண்டிருந்தபோது திடீரென பலத்த சத்தம் கேட்டது. இதில் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் ஒரு பகுதியில் இருந்த சுவர் முழுவதும் முற்றிலும் சரிந்து வீட்டின் வெளிப்பகுதியில் பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளது.

TN Fishermen Arrest: காலையிலேயே அதிர்ச்சி..! தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

இதனால் வீட்டில் இருந்தவர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இடிந்த சுவர் அருகில் உள்ள வீட்டுச் சுவரின் மீது விழுந்ததில் அந்த வீட்டில் இருந்த ஜன்னல் மற்றும் சிமெண்ட் காரைகளும் பெயர்ந்து சேதமடைந்து விட்டது. இடிந்த சுவர் வீட்டின் உள்பகுதியில் விழாமல் வெளிப்பகுதியில் யாரும் பயன்படுத்தாத இடத்தில் விழுந்ததால் நல் வாய்ப்பாக பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola