PM Modi: பிரதமர் மோடி தனது மூன்று நாள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, வெற்றிகரமாக டெல்லி திரும்பினார். அவரை அரசு அதிகாரிகள் வரவேற்றனர்.  இந்த பயணத்தின் போது ரஷ்யா மற்றும் ஆஸ்திரியா நாட்டு உயர்மட்ட தலைவர்களை சந்தித்து, பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.






பிரதமரின் ரஷ்யா பயணம்:



  • கடந்த 8ம் தேதி தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார்

  • அதிபர் புதின் தனது அதிகாரப்பூர்வ மாளிகையில் பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்தளித்தார்

  • தொடர்ந்து 9ம் தேதி இந்திய சமூகத்தினரிடையே பேசிய பிரதமர் மோடி, உலக நன்மைக்காக தோஸ்த் ரஷ்யா உடன் இந்தியா தோளோடு தோள் கொடுத்து செயல்படுவதாக தெரிவித்தார்.

  • தொடர்ந்து,  பிரதமர் மோடி, அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் இருநாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு உறவுகள், பொருளாதார கூட்டாண்மை மற்றும் பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

  • பிரதமர் மோடியை தனது நண்பன் என பாராட்டியதோடு, ரஷ்யாவின் உயரிய விருதையும் வழங்கி அதிபர் புதின் கவுரவித்தார். அத்துடன் ரஷ்ய பயணம் முடிய, அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, ஆஸ்திரியா சென்றடைந்தார்.

  • முன்னதாக, கடந்த 2019ம் ஆண்டுக்குப் பிறகு மோடி ரஷ்யாவிற்கு சென்றது இதுவே முதல்முறையாகும்.


ஆஸ்திரியாவில் பிரதமர் மோடி:



  • ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து, இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

  • தொடர்ந்து வியன்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினரிடையே உரையாற்றினார். அப்போது, உலகத்திற்கு இந்தியா புத்தத்தை கொடுத்ததே தவிர, யுத்தத்தை கொடுக்கவில்லை என மோடி பேசினார்.

  • தொடர்ந்து, இருநாடுகளின் பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் மோடி இன்று காலை டெல்லி வந்தடைந்தார்

  • கடந்த 41 ஆண்டுகளில் ஆஸ்திரியாவிற்குச் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.