திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த அஞ்சுகுழிப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (26). கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி அஞ்சுகுழிபட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அப்போது ஆனந்தராஜூக்கும், அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி (30), தீபன்ராஜ் (32), அருண்குமார் என்ற அருண்பாண்டி (30) உள்பட 15 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.


அப்படிபோடு! ஒருவழியாக தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க சம்மதித்த கர்நாடகா! ஆனால் ஒரு ட்விஸ்ட்!




தகராறு முற்றிய நிலையில் சத்தியமூர்த்தி உள்பட 3 பேர் ஆனந்தராஜை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இதுதொடர்பாக சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 15 பேரையும் கைது செய்தனர்.


Rice Ban: அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்த மத்திய அரசு.. அமெரிக்காவில் அலைமோதும் இந்தியர்கள்.. அதிர்ச்சி!


இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் கூடுதல் மாவட்ட  நீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிபதி மெகபூப் அலிகான் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சூசை ராபர்ட் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி மெகபூப் அலிகான் நேற்று தீர்ப்பு கூறினார்.




Modi Criticize: 56 இன்ச் சதையை துளைக்க 79 நாட்கள்: முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பிரதமர் மோடி? - வெளியான கடும் விமர்சனம்!


அதில் குற்றம்சாட்டப்பட்ட சத்தியமூர்த்தி உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மீதமுள்ள 12 பேர் மீதான குற்றச்சாட்டு தகுந்த சாட்சியங்களுடன் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண