சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூர் கலாமந்திரம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் பலசரக்கு கடை  ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். கடந்த  2005-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் காரைக்குடியைச் சேர்ந்த மணிராஜ் என்பவரின்  மகள் நதியாஸ்ரீ  என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ரித்தேஷ் என்ற மகனும் தேஜஸ்வி என்ற மகளும் உள்ளனர். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உயர்நீதிமன்ற குடும்ப நல நீதிமன்றத்தில் நவம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

 





 

இந்நிலையில் கண்டனூரில் உள்ள சந்திரசேகர் தனக்கு சொந்தமான மனை இடத்தை தொழில் அபிவிருத்திக்காக விற்பனை செய்ய ஏற்பாடு செய்த பொழுது ஏற்கனவே இந்த இடம் அவரது மனைவி நதியாஸ்ரீ விற்று விட்டதாக தகவல் அறிந்து சார் பதிவாளர் அலுவலகத்தில் விசாரித்த பொழுது 2015-லேயே நவம்பர் மாதத்திலேயே  சந்திரசேகர் இறந்து விட்டதாகவும் அதற்கு நதியாஸ்ரீ தான்  வாரிசாக சான்றிதழ் பெற்று பத்திரப்பதிவு மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர். உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்று வாரிசு சான்று வாங்கி பத்திரப்பதிவு செய்துள்ளதை அறிந்த பத்திரபதிவு  அலுவலர் உடனடியாக அந்த பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளார். இதுதொடர்பாக சந்திரசேகர் மனைவி நதியாஸ்ரீ மீது கடந்த மே 22ல்  சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளரிடம்   நிலஅபகரிப்பு  புகார் அளிக்கப்பட்டு  அந்த புகாருக்கு மாவட்ட  காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.  



 

தான் உயிரோடு இருக்கும் பொழுதே இறப்புச் சான்றிதழ்களும் தானும் தன் தாய் தந்தையும் உயிரோடு இருக்கும்போதே வாரிசு சான்றிதழும் வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் அளித்த புகாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் சந்திரசேகர் கேட்டுக்கொண்டதோடு  அது தொடர்பான ஆவணங்களோடு புகார் மனுவும் அளித்தார். உயிரோடு இருப்பவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய விவகாரம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர