தேனி , திண்டுக்கல் இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்து  வருகிறது. இரு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.



திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த வாரத்தை பொருத்த வரையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துகொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக நோய் தொற்றால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 19 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32060ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று  மட்டும் 13நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 31205ஆக குறைந்துள்ளது.  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 617ஆக இருக்கிறது. தற்போது 238பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல்.



அதே போல் தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 10 நபர்களுக்கு  நோய் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42832-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் இன்று மட்டும் 24 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை  பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 42085ஆக குறைந்துள்ளது. தற்போது  வரையில் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 513 ஆக இருக்கிறது. இன்று 234 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பால் தேனி மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  தேனி மாவட்டத்தில் இன்று  உயிரழப்புகள் ஏதும் இல்லை.  திண்டுக்கல் மற்றும் தேனி  இரு மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவலும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருவோர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.


‛கொரோனாவுக்கு சக்தி உள்ளது’ வைரஸிற்கு கோயில் கட்டும் தேனி முதியவர்!


ஒன்றல்ல ... இரண்டல்ல... 12 ஆயிரம் பாம்புகளை பிடித்த ‛ஸ்னேக்’ கண்ணன்!