தென்மேற்கு பருவமழை தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இதுவரை போதிய அளவு மழை பெய்யவில்லை. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள்  அணைகளில் நீர்வரத்து குறைந்தே காணப்பட்டது . குறிப்பாக மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடி நீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டது. போதிய மழை வரத்து இல்லாததால்  இந்த வைகை அணையில் நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்டது.


Asia Games 2023: ஆசிய போட்டி மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா...தங்கம் வெல்லுமா?



முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்படும்போது வைகை அணைக்கு நீர்வரத்து ஏற்படும். கடந்த 2 மாதங்களாக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.  இதனால் வைகை அணைக்கு கடந்த சில நாட்களாக சராசரியாக வினாடிக்கு 250 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கம்பம், போடி பகுதிகளில் கன மழை பெய்தது.


Asian Games Medal Tally: ஆசிய விளையாட்டு போட்டி - குறிவைத்து அடிக்கும் இந்தியா - பதக்கப் பட்டியலில் முதலிடம் யாருக்கு?



இதன் காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 333 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 425 கனஅடியாக அதிகரித்தது. வைகை அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 69 கனஅடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் இன்று 48.36 அடியாக உள்ளது வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாசன வசதி பெறும் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திடீரென நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயரத்தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Egg: இந்த உணவுகளை முட்டையுடன் சேர்த்து சாப்பிடாதீங்க...ஏன் தெரியுமா?