பராமரிப்பு பணி காரணமாக திருச்செந்தூர், வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்செந்தூரில் இருந்து இன்று (மார்ச் 8) இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-20606) தாம்பரம்- எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து நாளை மார்ச் 9 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரயில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: TN Womens Policy: மறந்துட்டீங்களா முதல்வரே..! “மகளிர் கொள்கை” பேப்பரில் மட்டும் தான் இருக்கு, செயல் எங்கே?
அதே தேதியில், நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் வந்தே பாரத் ரயில் (20666) மாம்பலம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
மதுரையில் இருந்து மார்ச் 9 ஆம் தேதி காலை 6.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து வருகிற மார்ச் 9 ஆம் தேதி குருவாயூர் செல்லும் ரயில் (16127) எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து 9 ஆம் தேதி திருச்செந்தூர் செல்லும் ரயில் (20605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும் என்று இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் இதற்கேற்ப தங்களது பயணங்களை மாற்றிக்கொள்ளுமாறு கூறப்படுகிறது.