மேலும் தீ விபத்தில் காயமடைந்த நபர்கள் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


 

பழைய பிரிட்ஜ் வெடித்ததில் தீ விபத்து

 

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே கட்ராபாளையம் உள்ளது. இந்த பகுதியில் காலணிகள் மொத்த விற்பனை நிலையங்கள் அதிகம் உள்ளது. அதே போல் பெரியார் பேருந்து நிலையம் அருகில் உள்ளதால், ஹோட்டல்கள், தங்கும் விடுதி உள்ளிட்ட பல தொழில்நிலையங்கள் செயல்படுகின்றது. இந்நிலையில் கட்ராபாளையம் தெருவில் செயல்பட்டு வரும் விசாகா பெண்கள் விடுதியில் இன்று அதிகாலை 5 மணி அளவில் பழைய பிரிட்ஜ் ஒன்று வெடித்துள்ளது. இதன் காரணமாக விடுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்த நிலையில் மாணவிகள் அவசர அவசரமாக வெளியேறி உள்ளனர்.

 

பின்னர் தகவல் அறிந்து வந்த மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் ஒரு மணி நேரமாக போராடி புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 


 

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர்

 

விடுதியில் தங்கியிருந்த மூன்று மாணவிகள் காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 2 பேர் உயிரிழந்தனர். பரிமளா, சரண்யா ஆகிய இருவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

 

தீ காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

 

தீ விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் விடுதி்வார்டன் புஷ்பா, செவிலியர் கல்லூரி மாணவி ஜனனி, சமையலர் கனி ஆகிய 3 பேர் எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் விடுதி உரிமையாளரை கைது செய்து போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.