மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23- ஆவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கி 3 நாட்களாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் மாநில செயலாளராக கே.பாலாகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பேசியபோது..,” இந்த மாநாட்டில் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது, தமிழகத்தில் பா.ஜ.க காலூன்றும் முயற்சியை தடுப்பது குறித்து ஆலோசித்தோம்.




80 பேர் கொண்ட மாநில குழு தேர்வு செய்யப்பட்ட அந்த குழுவானது மாநில செயலாளராக என்னையும்,  15மாநில செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்துள்ளனர், மாநாட்டில் 60க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. பா.ஜ.க,  ஆர்.எஸ்.எஸ் எங்கெல்லாம் நுழைகிறதோ அங்கெல்லாம் சென்று எல்லா தளத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நுழைந்து பா.ஜ.கவின் தலையீட்டை தடுக்க முயல்வோம். கோயில்களில் பண்பாட்டு  அடிப்படையில் நுழையும் வகையில் கோயில் நிர்வாகத்தை அனுகுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும், என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தி.மு.கவின் பா.ஜ.க எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக அரசியலில் நட்பு ரீதியாக துணை நிற்போம். மக்களின் வாழ்வாதார பிரச்னைக்காக போராடுவோம், ஆணவப்படுகொலையை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும். இன்னும் சாதிய தீண்டாமை உள்ளது. தமிழக அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரியிடம் சாதி ரீதியாக நடந்துகொண்டது கண்டிக்கதக்கது.




 ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகாரிக்கே இப்படி என்றால் சாதரண மக்களுக்கு என்ன நிலை உருவாகும் என்ற கவலை உள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் மத தீவிரவாத பிரச்சாரத்தை தடுக்கும் வகையில் கோயில் நிர்வாகங்களில் தலையிடுவது மற்றும் பா.ஜ.க கோயில் விழாவில் தலையிடுவதை தடுப்பது தொடர்பாகவும், மோடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டை நிரந்தர தத்துவாத்துவ ரீதியான எதிரியாக கருதுகிறார் ஏப்ரல் 4ஆம் தேதி மாநில அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து 500இடங்களில் போராட்டம் நடத்தவுள்ளோம்.




நீதிமன்றம் வரம்பை மீறி தீர்ப்பளிக்கின்றது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் உள்ள குடியிருப்புகளை காலி செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும். ஆக்கிரமிப்பில் இருக்ககூடியவர்களுக்கு உரிய ஏற்பாடு செய்துகொடுத்த பின்னர் அகற்ற வேண்டும். இதுபோன்று கோயில் நிலங்களில் உள்ளவர்களை வெளியேற்றுவதை தடுக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்கு சொந்தமான கோயில் கடைகளின் வாடகையை உயர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தியும் மே 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.




திமுகவுடனான இந்த கூட்டணி மீண்டும் தொடரும். சாலைக்கான நிதி முழுவதையும் வசூலித்த பின்னரும் டோல்கேட்டுகள் செயல்படுகிறது. அதனை ஒழுங்கப்படுத்த வேண்டும். இடதுசாரி ஜனநாயக அணி மாற்று என்ற மாற்றுகொள்கையை  உருவாக்கி செயல்படவுள்ளோம். மக்களின் பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அணு அளவு கூட ஊழல் இல்லாமல் செயல்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ்- கல்லூரி மாணவி தற்கொலை.. தனியார் கல்லூரி தாளாளர், முதல்வர் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு