காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவத்தில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் மோதல் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை தென்கலை பிரிவினர் மோதல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவத்தில் சோஸ்திர பாடல் பாடுவதில் மீண்டும் வடகலை தென்கலை பிரிவினர் இடையே தகராறு. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவம் நேற்று நடைபெற்றது. 

துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவத்திற்காக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள் வகையறாவினர் மற்றும் வடகலை பிரிவினர் சோஸ்த்திர பாடல் பாடுவது மரபு எனக் கூறப்படுகிறது. 

Continues below advertisement

இந்நிலையில் நேற்று வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள், வடகலை பிரிவினர் ஸ்தோத்திர பாடல் பாடிய நிலையில், மணவாள மாமுனிகளை ஆச்சாரியாராக கொண்ட தென்கலை பிரிவினரும் ஸ்தோத்திரப் பாடல் பாட முயன்றபோது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக வேதாந்த தேசிகரை ஆச்சாரியானாக கொண்ட வடகலை பிரிவினர், தென்கலை பிரிவினரை சோஸ்திர பாடலைப் பாட எவ்வாறு அனுமதிக்கலாம் என கோவில் நிர்வாக அறங்காவலரும் உதவி ஆணையருமான ராஜலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

போலீசார் சமாதான பேச்சு வார்த்தை

இதனைத் தொடர்ந்து விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியம் தலைமையில், போலீசார் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து வடகலை பிரிவினரிடம் விசாரணை மேற்கொண்டு சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிகர் சாற்று முறை உற்சவத்தின் போது, ஸ்தோத்திர பாடல் பாட தென்கலை பிரிவினருக்கு கோவில் நிர்வாகம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. கோவில் நிர்வாகம் தடை விதித்திருந்த நிலையில் இந்த ஆண்டு எப்படி பாடலாம் என வடகலை பிரிவு ஐயங்கார்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த ஆண்டு போட்ட தடை உத்தரவை உதவி ஆணையர் ரத்து செய்துவிட்டதாக ஒரு பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டினர். ‌ தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதற்கான, உத்தரவை வழங்க வேண்டும் வழங்க வேண்டும், என கேட்டு வடகலைப்பிரிவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து வடகலை பிரிவினர் நீதிமன்றத்தில், முறையிடப் போவதாக கூறியதையடுத்து தென்கலை பிரிவினர் கலைந்து சென்றனர். இந்த பிரச்சனையால் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.