முதல்வர் ஸ்டாலினே பதவி விலகுக என கோஷமிட்டவாறு திடீரென வாரச் சந்தையில் புகுந்த அதிமுகவினர். திகைத்து போன வியாபாரிகள், பொதுமக்கள்  ஆகியோரிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விட்டு சென்ற அதிமுகவினர்.


துண்டு பிரசுரங்கள்


தமிழகத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின் கட்டன உயர்வு,கஞ்சா, கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவற்றை கட்டுபடுத்த தவறிய திமுக  அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்றும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் அதிமுகவினர் பல்வேறு பகுதிகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.




அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட களக்காட்டூர் ஊராட்சி,குருவிமலை பகுதியில் இன்றைய தினம் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜு ஏற்பாட்டில் நடைபெற்றது.


திடீரென புகுந்த அதிமுகவினர்


இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம், அதிமுக அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன்  உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் குருவிலை பகுதியிலுள்ள வாரச்சந்தையில் காய்கறி, மளிகை பொருட்கள் என  ஒவ்வொரு கடை கடையாக சென்று வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.




பொது மக்கள் அதிக நடமாட்டம் மிகுந்த வாரச்சந்தையில் திடீரென புகுந்து அதிமுகவினர் தமிழக முதல்வர் ஸ்டாலினே பதவி விலகுக என கோஷமிட்டவாறு துண்டு பிரசுரங்களை வழங்கிய செயலால் வியாரிபாரிகளும்,பொதுமக்களும் சற்று திகைத்து போய் நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் அதிமுக காஞ்சிபுரம் மாவட்ட அவைத் தலைவர் குண்ணவாக்கம் கிருஷுர்த்தி,உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


அதிமுக நிர்வாகிகள்


நாடாளுமன்ற தேர்தல் தோல்வி தொடர்ந்து அதிமுக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என அதன் தலைமை முடிவு செய்துள்ளது. இதனால் இப்பொழுதிலிருந்து திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களை அதிமுகவினர் கையில் எடுக்க துவங்கியுள்ளனர். மின் கட்டண உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சனை ஆகியவற்றை கையில் எடுக்கவும் அதிமுக தலைமை முடிவு எடுத்துள்ளது.




இதனை தொடர்ந்து மக்களிடமும் கொண்டு செல்வதற்காக திமுகவிற்கு எதிரான துண்டு அறிக்கையை அனைத்து நிலை நிர்வாகிகளும், நகரம் கிராமம் என அனைத்து பகுதிக்கும் கொண்டு செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் அதிமுகவினர் தமிழ்நாடு முழுவதும் துண்டு பிரசுரங்களை வழங்கியும் திமுகவிற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும், பல்வேறு இடங்களில் நூதன முறையில் பிரச்சாரத்தை துவங்கியுள்ளனர்