ஒரு குடும்பத்தை மிகுந்த மகிழ்ச்சியாகவும், பெற்றோர்களுக்கு எத்தனை கவலைகள் இருந்தாலும் அதை மறக்க வைக்கும் ஆற்றலும் குழந்தைகளுக்கு உண்டு. குழந்தைகள் இருக்கும் வீட்டில் சிரிப்பு சத்தத்திற்கு குறைவே இருக்காது. அதேபோல, குழந்தைகள் செய்யும் சுட்டித்தனமும், அவர்கள் செய்யும் சேட்டைகளுக்கும் எல்லையே இருக்காது.


சுட்டிக் குழந்தையின் குறும்புத்தனம்:


அந்த வகையில் தற்போது இணையத்தில் ஒரு குழந்தை செய்த சேட்டை வைரலாகி வருகிறது. வடகிழக்கு இந்தியாவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. வீட்டின் வெளியே சிறிய தள்ளுவண்டியில் செடிகளை கட்டுக்கட்டாக கட்டி வைத்துள்ளனர். அப்போது, வீட்டின் வாசல் திறந்திருந்த காரணத்தால் வீட்டில் இருந்து வெளியே வந்த குழந்தை, அந்த தள்ளுவண்டியின் கைப்பிடிகளை தூக்கியது.






இதில் செடிகளின் எடை முழுவதும் எதிர்திசைக்கு சென்றதால் வண்டியின் கைப்பிடி மேலே சென்றது. கைப்பிடிகளை இறுக்கப் பிடித்திருந்த குழந்தையும் அந்த கைப்பிடிகளுடன் மேலே சென்றது. இதனால், சில நொடிகள் குழந்தை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.


வைரலாகும் வீடியோ:


குழந்தையை வீட்டின் உள்ளே காணாததால் பதறிப்போன தாய் வெளியே வந்து பார்த்தார். அப்போது, குழந்தை தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து உடனே சிரித்துக் கொண்டே குழந்தையை தூக்கிக் கொண்டார். இந்த சம்பவம் அங்கே இருந்த சி.சி.டி.வி. ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் இன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.


குழந்தையின் குறும்புத்தனத்தை ரசித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர். அதேசமயம், கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தி வருகின்றனர். குழந்தைகளின் அழகான குறும்புகளுக்கு இந்த வீடியோ ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.


மேலும் படிக்க: எத்தனை சிம்கார்டுகள் வச்சிருக்கீங்க? இனி சிறைதான்! புது சட்டம் கொண்டுவந்த அரசு! விதிகள் இதுதான்!


மேலும் படிக்க:  Special Bus: ஆடி பௌர்ணமி! சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு நாளை 50 ஏ.சி. பேருந்துகள் இயக்கம்!