மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் நிதின் கட்கரி. மத்திய அரசின் சார்பில் சாலைகளில் பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், முகாம்கள், விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகிறது.




இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாரின் வீடியோ ஒன்றை மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் திருமணமாகி கணவனுடன் செல்லும் மகளைப் பார்த்து, மகளின் தந்தை ஆனந்த கண்ணீருடன் நிற்பார். அப்போது, அவரிடம் காவல் அதிகாரி வேடத்தில் வரும் அக்‌ஷய்குமார் மணமகள் செல்லும் காரைப் பற்றி கேட்கிறார். அதற்கு அந்த பெண்ணின் தந்தை காரின் பெருமையை பற்றி கூறுகிறார். அதற்கு அக்‌ஷய்குமார் இத்தனை விஷயங்கள் இருந்தாலும் காரில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே உள்ளது என்கிறார்.






இதையடுத்து, மணமக்கள் காரில் இருந்து இறங்குகின்றனர். பின்னாலே, வரும் காரில் 6 ஏர் பேக்குகள் உள்ளது. அதாவது ஓட்டுநர், ஓட்டுநர் அருகில் உள்ள இருக்கை, பின்னால் உள்ள இருக்கை. காரின் உள்புறம் இருபுறமும் என காரின் உள்ளே மட்டும் 6 ஏர் பேக்குகள் உள்ளது. இந்த விளம்பரத்தின் மூலம் கார் வாங்கும்போது 6 ஏர் பேக்குகள் கொண்ட காரை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




மத்திய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைப் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட விழிப்பணர்வு விளம்பரமான இதில் அக்‌ஷய்குமார் நடித்திருப்பதற்கு மத்திய அமைச்சர் நிதின்கட்காரி நன்றி கூறியுள்ளார். அக்ஷய்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில், அக்‌ஷய்குமார் தேசிய சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு உங்கள் ஆதரவுக்கு நன்றி. உங்களது பங்களிப்பு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பியுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.


சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, வெளிநாடுகளுக்கு இங்கிருந்து ஏற்றுமதி செய்யும் கார்களுக்கு மட்டும் 6 ஏர்பேக்குகள் வைக்கும்போது, இந்தியாவிலே தயார் செய்யும் கார்களுக்கு மட்டும் ஏன் 4 ஏர் பேக்குகள் வைக்கப்படுகிறது? நமது உயிர்களுக்கு மதிப்பு இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : அவமானப்படுத்தினாரா மூத்த காவல் அதிகாரி..? தற்கொலை செய்துகொண்ட காவலர்..என்ன நடந்தது?


மேலும் படிக்க : Video : உத்தரகண்டில் நீரில் மூழ்கும் வீடுகள்... மேக வெடிப்பால் விபரீதம்.. பதைபதைக்க வைக்கும் வீடியோ