நொய்டாவில் இன்றிலிருந்து அடுத்த 15 நாட்களுக்கு, நகர் முழுவதும் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு, பழைய பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்வார்கள் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.


நொய்டாவில் பழைய வாகனங்கள்


நொய்டா போக்குவரத்து காவல்துறையின் தரவுகளின்படி, என்சிஆர்-ல் பயன்படுத்த அனுமதிக்கப்படாத 15 வருடங்களுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்கள் மற்றும் 10 வருடங்களுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் என மதிப்பிடப்பட்ட நிலையில், மொத்தம் 1லட்சத்து 54 ஆயிரத்து 379 வாகனங்கள் ஆயுள் முடிந்த வாகனங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பெட்ரோல் வாகனங்கள் (1.21 லட்சம்) ஆகும். மீதமுள்ள 33 லட்சம் மட்டுமே டீசல் வாகனங்கள்.


2015 ஆம் ஆண்டில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) என்சிஆர் முழுவதும் ELVகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க பழைய வாகனங்களில் இருந்து அதிக மாசு உமிழ்வை மேற்கோள் காட்டியது. அதன்பிறகு, 3,500 ELVகள் கைப்பற்றப்பட்டு, கவுதம் புத் நகரில் அவற்றின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் 1,138 வாகனங்கள் அடங்கும், அவற்றின் பதிவுகள் ஏப்ரல் மற்றும் நவம்பர் 2022 க்கு இடையில் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



15 நாட்களுக்கு பறிமுதல்


காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) அனில் குமார் யாதவ் கூறுகையில், "மாவட்டத்தில் ELV களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதுபோன்ற வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீஸ் குழுக்கள் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்படுவார்கள்," என்று அவர் கூறினார். பிப்ரவரி 1 முதல் 15 வரை இந்த அமலாக்க இயக்கம் மேற்கொள்ளப்படும் என உதவி வட்டார போக்குவரத்து அதிகாரி (ARTO- நிர்வாகம்) சியாரம் வர்மா கூறியுள்ளார். போக்குவரத்துத் துறை அந்தந்த வாகன உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது என்றும் கூறினார். மேலும் பேசிய அவர், "அவர்கள் கார் பதிவுச் சான்றிதழ்களை ஒப்படைத்து, வாகனத்தை அகற்ற வேண்டும் அல்லது என்சிஆர் வாகனத்தை எடுத்துச் செல்வதற்கு முன், போக்குவரத்துத் துறையிடமிருந்து NOC (ஆட்சேபனை இல்லா சான்றிதழ்) பெற வேண்டும்," என்று சியாரம் வர்மா கூறினார்.


தொடர்புடைய செய்திகள்: INDvsNZ 3RD T20: தொடரை வெல்லப்போவது யார்..? வெறுங்கையுடன் போகுமா நியூசி..? வெற்றியுடன் முடிக்குமா இந்தியா..?


ஸ்க்ராப்பிங் செய்யப்படும்


மாவட்டத்தில் ELVகளுக்கான இரண்டு ஸ்கிராப்பிங் மையங்கள் உள்ளன. ஒன்று நொய்டா செக்டார் 80 இல் மாருதி சுசுகி டொயோட்சு இந்தியா பிரைவேட் லிமிடெட் (கார் தயாரிப்பாளர்கள் மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா சுஷோ குழுமத்தின் கூட்டு முயற்சி) மற்றும் மற்றொன்று கிரேட்டர் நோடா-1ல் உள்ள மஹிந்திரா MSTC மறுசுழற்சி பிரைவேட் லிமிடெட் ஆகும். ஒரு மாதத்திற்கு 2,000 ELVகளை ஸ்கிராப் செய்து மறுசுழற்சி செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த வசதிகளில் தங்கள் வாகனங்களை ஸ்கிராப் செய்யக் கொடுக்கும் உரிமையாளர்கள் புதிய வாகனத்தைப் பதிவு செய்யும் போது கட்டவேண்டிய வரியில் இருந்து 15% தள்ளுபடியைப் பெறலாம் என்ற சலுகையையும் அறிவித்துள்ளது.



பெரும்பாலானவை பயன்படுத்தப்படாதவை


செவ்வாயன்று, ARTO சியாரம் வர்மா, ELV களைக் கைப்பற்ற போக்குவரத்துத் துறையும் தனித்தனி இயக்கங்களை மேற்கொள்வதாகக் கூறினார். இதுபோன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதை உறுதி செய்ய உ.பி அரசு கடந்த வாரம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதற்கு முன், 2021 செப்டம்பரில், சரியான பதிவுகள் இல்லாத அல்லது பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக அறிவிக்கப்பட்ட ELV களை அகற்றுவதற்கான அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டது.


"இதுபோன்ற பழைய வாகனங்களை இயக்கவும், அகற்றவும் அரசு எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மாவட்டத்தில் 23 அரசு வாகனங்கள் (இஎல்வி) இருப்பதைக் கண்டறிந்துள்ளோம், அவைகளும் அகற்றப்பட வேண்டும். அதுவும் செய்யப்படும்," என்று ARTO கூறினார். என்சிஆர் நகரில் 1.5 லட்சம் ELVகள் இருப்பதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் ஒப்புக்கொண்டார், ஆனால் அவற்றில் பெரும்பாலானவை "காலாவதியானவை" என்றும் அவை பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.